ஈரோடு, ஆக.9- கல்வெட்டு அறிஞர் புலவர் செ.இராசு கோவை தனியார் மருத்துவ மனையில் புதனன்று காலமானார். புலவர் செ.இராசு (85) ஈரோட்டில் பிறந்த வர். தமிழ்கூறும் நல்லு லகின் மூத்த தமிழறிஞராக உலகெங் கும் புகழ்பெற்று விளங்கினார். திருப்ப னந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தொடங் கிய அவரது அறிவுப்பயணம், 1982 ஆம் ஆண்டில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில் வந்து சங்கமித்தது. தொல்லியல் கல்வெட்டியல் துறைப் பேராசிரியர் பணி யிலிருந்து ஓய்வு பெற்றார். அவரது தமிழ்ப் பணி இறுதிவரை தொடர்ந்தது. கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் எனும் பொருண்மையில் முனைவர் பட்டம் பெற்ற வர். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை யும், அதே அளவிலான பல்வேறு கட்டுரை களையும் எழுதியவர். 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட (ஈரோடு) அரச்சலூர் இசைக் கல் வெட்டினை இவர் தான் முதலில் வெளிப் படுத்தினார். இந்தியாவிலேயே அதுதான் முதல் இசைக்கல்வெட்டு என்பது குறிப்பி டத்தக்கது. ஈரோட்டிற்கு அருகிலுள்ள கொடுமணல் பகுதியில் அகழாய்வு செய்து, பல்லாண்டுகளுக்கு முன்பே தமிழ கத்திற்கும், ரோமானியர்களுக்கும் இருந்த உறவினைக் கண்டறிந்து அறிவித்தார். கல்வெட்டு, செப்பேடு பட்டயம், தலவர லாறுகள், சங்க இலக்கியங்கள் என அவ ரது அறிவு பயணம் மிகவும் நீண்டது. உடல்நிலை பாதிப்பு காரணமாக செ. இராசு, கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருந்தார். இந்நிலையில், அவர் புதனன்று உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு, அஞ்ச லிக்காக வைக்கப்பட்டது. புலவர் செ.இராசு வின் உடலுக்கு தமுஎகச மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, ஈரோடு மாவட்டத் தலைவர் மு.சங்கரன், மாவட்டப் பொருளாளர் கி.கணேசன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் வீ.ராஜூ, தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் மா.அண்ணாதுரை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.