states

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் சரிவு!

புதுதில்லி, மே 31 - கடந்த மே 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 59,347.7 கோடி டாலராக சரிந்துள்ளது. மே 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 355.3 கோடி டாலா் உயா்ந்து 59,952.9 கோடி டாலராக இருந்தது. அது, மே 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 605.2 கோடி டாலா் சரிந்து 59,347.7 கோடி டாலராகி இருக்கிறது. இதே மதிப்பீட்டு வாரத்தில், டாலா் அல்லாத யூரோ, பவுண்ட், யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை டாலா் மதிப்பில் கணக்கிட்டு கூறப்படும் அந்நிய நாணய சொத்துகளானது, 465.4 கோடி டாலா் குறைந்து 52,494.5 கோடி டாலர்களாகவும், தங்கம் கையிருப்பு 12.27 லட்சம் டாலா் குறைந்து 4,512.7 கோடி டாலராகவும், சா்வதேச நாணய நிதியத்தால் (ஐஎம்எப்) உருவாக்கப்பட்ட கையிருப்புச் சொத்துகள் (எஸ்டிஆா்) 13.7 கோடி டாலா் குறைந்து 1,827.6 கோடி டாலராகவும் சரிவைக் கண்டுள்ளன. சா்வதேச நாணய நிதியத்தில் நாட்டின் கையிருப்பு, மே 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 3.5 கோடி டாலா் குறைந்து 513 கோடி டாலராக உள்ளது. உலகளாவிய பொருளாதார சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் அது குறைந்து வருகிறது. அக்டோபா் 2021-இல் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,500 கோடி டாலர் என்ற உச்ச அளவை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.