புதுதில்லி, பிப். 18 - மின் நுகர்வுக் கட்டணத்தை உயர்த்துமாறு, மின்சார விநியோக நிறுவனங்களுக்கு மோடி அரசு அறி வுறுத்தல் வழங்கியுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் மின் கட்ட ணங்கள் உயரும் நிலை ஏற்பட்டு ள்ளது. நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிற்கு, ஒன்றிய அரசின் மின் துறை அமைச்சகம் இதுதொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளது. “குறைவான விலையில் மின்சா ரம் வழங்க மின் விநியோக நிறு வனங்களுக்கு உத்தரவிடும் மாநில அரசுகள், மானியங்களை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை. இத னால் மாநில அரசுகளின் கடன் பாக்கி, ரூ. 59 ஆயிரத்து 489 கோடி யாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் இவ்விஷயத்தில் மிக மோசமாக செயல்படுகின்றன. நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட மின் பகிர்மான கழகங்கள் அதிக கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப் படுவதால் அவற்றின் வட்டி சுமை அதிகரிக்கிறது. இந்த வகையில், நாடு முழுவதும் 29 மின் விநியோக நிறுவனங்கள், எதிர்மறை நிகர மதிப்பை கொண்டுள்ளன. 2019 - 2020 நிதியாண்டில் மட்டும் 5.2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதே கால கட்டத்தில் மின் விநியோக நிறு வனங்கள் 4.9 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுள்ளன. மின் விநியோக நிறுவனங்களின் மோசமான பில்லிங் மற்றும் வசூல் திறன் ஆகியவையும் நிதிநிலை மோசம் அடைய ஒரு காரணம் என கூறப்பட்டுள்ளது. எனவே, அதி கரித்து வரும் செலவினங்களைச் சமாளிக்க மின் விநியோக நிறு வனங்கள் உரிய அளவிற்கு கட்ட ணத்தை உயர்த்த வேண்டும்” என்று அறிக்கையில் பரிந்துரை வழங்கப் பட்டுள்ளது.