states

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி இஸ்லாமிய முதியவர் அடித்துக் கொலை!

பாட்னா, மார்ச் 10 - மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி இஸ்லாமிய முதியவர் நசீம் குரேஷி, மாட்டுக் குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றுள் ளது. பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் ஹசன்புர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது முதி யவர் நசீம் குரேஷி. இவர் கடந்த செவ்வாய் கிழமையன்று தனது உறவுக்கார இளை ஞர் பேரோஷ் குரேஷி என்பவருடன் அருகில் உள்ள ஜோகியா கிராமத்திற்குசென்றுள்ளார். அப்போது, ஜோகியா கிராமத்திலுள்ள  மசூதி அருகே நசீம் குரேஷி, பேரோஷ்  ஆகியோரை ஒரு கும்பல் இடைமறித்துள் ளது. மேலும், மாட்டு இறைச்சி வைத்திருந்த தாக சந்தேகமடைந்து இருவரிடமும் அந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் நசீம், பேரோஷ் மீது கடுமை யாக தாக்கியுள்ளது. பேரோஷ் அந்த கும்பலிடமிருந்து தப்பியோடிய நிலையில், நசீமை சுற்றி வளைத்து கொடூரமாகத் தாக்கி,  பின்னர் அவரை ரசூல்பூர் (சரண்) போலீ சிடம் ஒப்படைத்துள்ளது. போலீசார் நசீமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் நசீம் குரேஷி (55) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள் ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தில் முதியவரை  அடித்துக் கொன்ற சுஹில் சிங், ரவி ஷா, உஜ்வால் சர்மா ஆகிய 3 பேரை, தற்போது  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற சந்தேகத்திற்குரிய நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் கவுரவ் மங்லா தெரிவித்துள்ளார்.