states

img

டெல்லி - ஆட்டோ மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்து: 4 பேர் பலி  

டெல்லியில் ஆட்டோ மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.  

டெல்லி – இந்திராகாந்தி மைதானம் அருகே உள்ள சாலையில் இன்று காலை ஆட்டோவில் 4 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சாலையின் மறுபுறம், வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோவின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அறிந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும் தப்பியோடிய கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.  

;