states

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்தி வைப்பு

புதுதில்லி,டிச.24-  காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15-வது கூட்டம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின்  15-வது கூட்டம் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறும் என்றும்  மேகதாது அணை  திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட் டது. இந்த கூட்டம் திடீரென டிசம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கர்நாடக சட்டப்பேரவையில் பேசுகையில்,  ‘’காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த‌ கூட்டத்தில் (டிசம்பர் 27)  மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி கிடைக்கும். அதற் கான முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது’’ என்று  தெரிவித்தார். இந்நிலையில், டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறு வதாக இருந்த காவிரி  மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு  மாதத்தில்  3 முறை ஆணை யத்தின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.