states

img

அசாம் முதல்வர் மதவெறி பேச்சு

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அம்மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் தொகை  40 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத வெறியை கிளப்பி யுள்ளார்.மேலும்  வட கிழக்கு மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் அச்சுறுத்தலை ஏற்படுத் துவதாகவும் பேசியுள் ளார்.  மேலும் முஸ்லிம் மக்கள் தொகை உயர்ந்து இருப்பது எனக்கு அரசியல் பிரச்சனையாக இல்லை.அது  எனக்கு வாழ்வா சாவா பிரச்சனை எனவும்,குறிப்பிட்ட பிரிவு மக்களே வன்முறையில் ஈடுபடுகிறார்கள் எனவும் முஸ்லிம்களை குறிப்பிட்டு  மத விரோதத்தை தூண்டியுள்ளார்.    பாஜகவில் இஸ்லாமிய வெறுப்பை கக்கி வரும் தலைவர்களுள் ஒருவரான  அசாம் முதல்வர் ஹிமந்தா தற்போது மீண்டும் தனது வெறுப்புப் பேச்சை துவங்கியுள்ளார்.