states

img

கருவில் உள்ளபோதே ‘குழந்தைகளின் மனதை சுத்திகரிக்க’ முடியுமாம்.. தில்லியில் எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு ‘பயிற்சியளித்த’ ஆர்எஸ்எஸ்!

புதுதில்லி, மார்ச் 8 - கருவில் உள்ளபோதே ‘குழந்தை களின் மனதை சுத்திகரிப்பது’ குறித்து, பெண்களுக்கும் மருத்துவர்களுக்கும் ஆர்எஸ்எஸ் ‘பயிற்சி’ கொடுத்தது சர்ச்சையாகியுள்ளது. குழந்தைகள் கருவறையில் இருக்கும் போதே பல இந்து வேதங் களை படிப்பதாலும், அதுதொடர்பான உபன்யாசங்களை கேட்பதாலும் ராமப்பிரான் போல குழந்தை பிறக்கும் எனவும் ஆர்எஸ்எஸ் இந்த பயிற்சி யின்போது தெரிவித்துள்ளது. தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மகளிர் பிரி வான ‘ராஷ்டிர சேவிகா சமிதி’யின் ஓர் அங்கம் ‘சம்வர்தினி நியாஸ்’ ஆகும். இந்த அமைப்பின் சார்பில் ‘கர்பா  சன்ஸ்கார்’ அதாவது ‘கர்ப்ப கலாச்சாரம்’ என்ற பெயரில் மிகப் பெரிய பயிலரங்கம் ஞாயிறன்று நடை பெற்றுள்ளது. இதில் ஏராள மான பெண்களும், மகப்பேறு  மருத்துவர்களும் கலந்துகொண்டுள்ள னர். அப்போதுதான் கருவில் இருக்கும் குழந்தைகளின் மனதை சுத்திகரிப்பது தொடர்பான ‘பயிற்சிகள்’ வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ‘எய்ம்ஸ்’ போன்ற பெரிய மருத்துவ மனைகளில் இருந்து 80 மகப்பேறு  மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து ‘சம்வர்தினி நியாஸ்’ பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் மாதுரி மராத்தே அளித்துள்ள பேட்டியில், “கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுப்பது இந்தியாவில் ஒன்றும் புதிதல்ல. உதாரணமாக, மராத்திய மன்னர் சிவாஜி கருவறையில் இருந்த போது அவரது தாயார் ஜீஜாபாய் பகவத் கீதை, ராமாயணம் போன்ற வற்றை படித்தார். கருவிலேயே இவற்றை கேட்டு வளர்ந்ததால்தான் மிகப்பெரிய இந்து வீரராக சிவாஜி  திகழ்ந்தார். அதே விஷயத்தைத்தான் நாங்கள் இங்கு கற்றுத்தருகிறோம். தினமும் பகவத் கீதை, ராமா யணம் படிப்பது; இந்திய கலாச்சாரத்தை கருவில் இருக்கும் குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பது போன்ற பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன. கர்ப்ப காலம் முதல் குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை இந்த பயிற்சி வழங்கப்படும். கருவில் இருக்கும்போதே குழந்தை கள் 500 வார்த்தைகள் வரை தெரிந்து கொள்ள முடியும்” என்று தெரிவித்துள் ளார்.

“இந்தியாவில் அண்மைக்கால மாக உடல் ஊனத்துடனும், ஆட்டிசம் போன்ற பாதிப்புகளுடனும் குழந்தை கள் பிறப்பது அதிகமாகியுள்ளது. கருவில் இருக்கும் போது தங்கள் குழந்தை குறித்து இந்த காலத்து பெண்கள் பெரிதாக அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. அதுவே, இதுபோன்ற குறைபாடுகளுக்கு காரணம். எனவே, குழந்தைகளின் நலனையும், அவர்களின் மனதையும் சுத்திகரிப்பதற்காக இதுபோன்ற பயிற்சிகள் அவசியம்” என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ராம ஜெயாசுந்தர் கூறியுள்ளார். ‘சம்வர்தினி நியாஸ்’ அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜன் மிட்டல், செய்தி யாளர்களிடம் கூறும்போது, “கருவில் இருக்கும் போதே குழந்தை களை தூய்மைப்படுத்த வேண்டியது முக்கியம்.  இந்தியாவின் பழம்பெருமையை மீண்டும் நிலைநாட்டுவதற்காக இந்தப் பயிற்சியை நாங்கள் வழங்குகிறோம். இப்போது பாருங்கள். இந்தியாவில் எத்தனை குற்றங்கள் நடக்கின்றன.. பெற்றோரை கொலை செய்யும் பிள்ளைகள், சிறு குழந்தைகளை கூட விடாத காமுகர்கள் என நாடே சீரழிந்து கிடக்கிறது. எனவே, இந்த காலத்தில் ராமபிரானை போன்ற ஒழுக்கமும், வீரமும் கொண்ட குழந்தைகள் இந்தி யாவுக்கு அவசியமாகிறது. இந்த நோக்கத்திலேயே இத்திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1000 கரு சுத்திகரிப்பு குழந்தைகளை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்” என தெரிவித்துள்ளார்.