states

img

உ.பி. மக்கள், பாபாஜியை மடத்திற்கே அனுப்ப தீர்மானித்துவிட்டனர்!

லக்னோ, பிப். 28 - உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அகிலேஷ் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழைகளிடம் இருந்து பணத்தைப் பெற்று தங்கள் பணக்கார தொழிலதிபர்களுக்கு கொடுக்க பாஜக விரும்புகிறது. பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தி, ஏழை  மக்கள் வாகனங்களை ஓட்ட முடியாத அள வுக்கு பாஜக அரசு செய்துள்ளது. சட்டப்பேர வைத் தேர்தல் முடிந்ததும் பாஜக-வினர், பெட்ரோல் விலையை 200 ரூபாயாக (லிட்ட ருக்கு) உயர்த்துவார்கள் என்று  பத்திரிகைகளும் எழுதத் தொடங்கி விட்டன.  இனிமேல் விவசாயிகள் கூட டிராக்டரை இயக்க முடியாது. எனவே, மக்கள் சமாஜ்வாதி கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்.  மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சிதான் அடுத்த ஆட்சியை அமைக்க உள்ளது. பாஜக பொதுக் கூட்டங்களில் மக்கள் கூட்டமே இல்லை. உத்தரப் பிரேதச மக்கள் பாபாஜியை (துறவி) மீண்டும் அவருடைய மடத்துக்கே அனுப்ப தீா்மானித்து விட்டனா். அவரும் (யோகி ஆதித்யநாத்) மார்ச்  11-ஆம் தேதிக்கு லக்னோவிலிருந்து கோரக்பூ ருக்கு டிக்கெட்டுகளை பதிவு செய்துள்ளார்.  இவ்வாறு அகிலேஷ் பேசியுள்ளார்.