states

தில்லி ஆளுநர் 10 முறை நோட்டீஸ் அனுப்பினாலும் அதை கிழித்தெறிவேன்!

புதுதில்லி, செப்.8- தில்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா எத்தனை முறை அவதூறு நோட்டீசை அனுப்பினாலும், அதனை கிழித்துப் போடுவேன் என்று ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கூறியுள்ளார். தில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால்  தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் அரசு உள்ளது. இந்நிலையில், இந்த அரசை, ஆளுநர் மூலமாக ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறது. முன்னாள் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் துவங்கி, தற்போதைய ஆளுநர் வினய் குமார் சக்சேனா வரை, தில்லி  அரசுக்கும், ஆம் ஆத்மி தலைவர் களுக்கும் குடைச்சல் கொடுப்ப தையே வேலையாக வைத்துள்ளனர். இதனிடையே, “கடந்த 2016-ஆம்  ஆண்டில், 500 மற்றும் 1,000 ரூபாய்  நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப் பட்ட போது, காதி மற்றும் கிராமப் புறத் தொழில் கமிஷன் தலைவராக இருந்த வினய் குமார் சக்சேனா, 1,400  கோடி ரூபாய் பணத்தை மாற்றினார்” என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான -

மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங், அதிதி மற்றும் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் அண்மையில் ஆளுநர் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தனர். இதற்காக, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அதில், “சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி வெளியிட்டுள்ள அவ தூறு குற்றச்சாட்டுகளை 48 மணி  நேரத்துக்குள் நீக்கிவிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக நட வடிக்கை எடுக்கப்படும்” என்று தெரி வித்திருந்தார். இந்நிலையில், சக்சேனாவின் நோட்டீஸ் குறித்து, தில்லியில் செய்தி யாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், “உண்மையை பேசுவதற்கு அரசியல் சாசனம் எனக்கு உரிமை கொடுத்துள்ளது.  எம்.பி. என்ற முறையில், உண்மை யை பேசுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. ஊழல்வாதி, திருடர் அனுப்பிய நோட்டீசை கண்டு பணிந்து போக மாட்டேன். இந்த நோட்டீசை கிழித்தெறிவேன். 10  முறை அனுப்பினாலும் கிழித்தெறி வேன். இவ்வாறு அவர் கூறினார்.

;