states

img

9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ; மருத்துவமனையில் இடம் அளிக்காததால் உயிரிழப்பு

9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ;  மருத்துவமனையில் இடம் அளிக்காததால் உயிரிழப்பு

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் கொடூரம்

பாட்னா பாஜக கூட்டணி ஆட்சி நடை பெறும் பீகார் மாநிலத் தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமான அளவில் உள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளு க்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ச்சியாக அதி கரித்து வருகின்றன. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் ரோகித் சஹானி என்ற நபர் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி  பக்கத்து வீட்டில் வசிக்கும் 9 வயது சிறுமியை அளில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்துள்ளார். தொடர்ந்து கத்தி யால் சிறுமியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பியுள்ளார்.  மகளைக் காண வில்லை என்று தேடி வந்த சிறுமியின் தாயிடம், அக்கம் பக்கத்தினர் சிறுமி ரோகித் சஹானியுடன் சென்றதாகக் கூறியிருக்கிறார்கள். ரோகித்திடம் தாய் விசாரித்த போது மற்றும் அக்கம் பக்கத்தினர் தாக்குதல் நடத்தியதால் அவர் உண்மையை ஒப்புக்கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமியின் தாய், தனது உற வினர்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுமியை அனு மதிக்காமல் 70 கிமீ தொலைவில் உள்ள பாட்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியி ருக்கிறார்கள். உரிய நேரத்தில்  சிகிச்சை இல்லை அங்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், படுக்கை வசதி ஒதுக்கப்படுவதற்காக 6 மணி நேரம் காக்கவைக்கப்பட்டு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில், அடுத்த நாளே சிறுமி  உயிரிழந்துவிட்டார். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததே மகள் இறந்ததற்கு காரணம் என சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக சிறுமியின் உற வினர் ஒருவர் கூறுகையில்,“ஏற் கெனவே ஆம்புலன்ஸ் வர 2 மணி நேரம் ஆனது. பிறகு மருத்துவமனை மருத்துவமனையாக அலைந்தோம். மருத்துவமனை வாயிலிலேயே, படுக்கை ஒதுக்கப்படுவதற்காக 6 மணிநேரம் காத்திருந்தோம். ஆனா லும் சிறுமி இறந்துவிட்டார்” என கண்ணீர் மல்கக் கூறினர். பாஜக கூட்டணி அரசுக்கு வலுக்கும் கண்டனம் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததன் காரணமாகவே சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு, கத்தியால்  குத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக் கிடையே மருத்துவமனையின் தரம், இடம் போன்ற பிரச்சனைகளால் உயிர் பிழைக்க வேண்டிய 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாட் டையே உலுக்கிய இந்த சம்பவத்தி ற்கு எதிராக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.