கர்நாடக மாநிலம் திப்டூர் பகுதி யைச் சேர்ந்த 5 பேர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நள்ளிரவில் மைசூ ரில் இருந்து மீண் டும் சொந்த ஊருக்கு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்த னர். மாண்டியா மாவட்டத்தின் பாண்டவபுரம் பகுதி அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த விஸ்வேஸ்வரய்யா வாய்க்கா லில் தவறி விழுந்தது. தகவல் அறிந்த மீட்புப் படையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலை யில், காரில் இருந்த 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். விஸ்வேஸ்வரய்யா வாய்க்காலில் கடந்த 5 ஆண்டுகளில் 40 பேர் உயிரிழந் துள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு பேருந்து ஒன்று வாய்க்காலில் பாய்ந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். இதில் சின்னஞ்சிறிய விபத்துகள் கணக்கில் கொள்ளாமல் இருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது. விஸ்வேஸ்வரய்யா வாய்க்காலின் தொடர் விபத்தை முடி வுக்கு கொண்டு வர புதனன்று அப்பகுதி எம்எல்ஏ தர்ஷன் புட்டனய்யா தலைமை யில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.