states

img

இந்தியாவில் எச்எம்பிவி வைரஸ்

உலகை மறைமுகமாக அச்சுறுத்தி வந்த  நியூமோவிரிடே வைரஸின் உருமாற்றமான ஹியூமன் மெடாநிமோ வைரஸை (Human Meta pneumo virus - HMPV) சீன அரசு கண்டறிந்துள்ளது. சீனாவில் குளிர் காலத்தில் சுவாசப்பாதை தொற்று நோய்கள் அதிகரிப்பது இயல்பு. ஆனால் சுவாசப்பாதை சிகிச்சைக்கு வரும் நபர்களிடம் வித்தியாசமான உடலியல் பிரச்சனை இருந்துள்ளது. இதனை ஆய்வு செய்த சீன அரசு, “மக்களிடையே குளிர்காலத்தில் பரவி வருவது ஹியூமன் மெடாநிமோ வைரஸ் (எச்எம்பிவி) ஆகும். ஆனால் இந்த வைரஸ் வீரியமற்றது. பரவலும் மிக மிகக் குறைவு. முறையான சிகிச்சை மேற்கொண்டு வந்தால் குணப்படுத்தலாம்” என அறிவித்து சில வழி காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

இந்தியாவில்...

இந்நிலையில், எச்எம்பிவி வைரஸ் இந்தியா விலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 8 மாத ஆண் குழந்தைக்கு எச்எம்பிவி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு பாப்டிஸ்ட் மருத்துவமனை குழந்தைக்கு எச்எம்பிவி வைரஸ்  பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அதேபோல் பெங்களூரு பகுதி யில் உள்ள மற்றொரு 3 மாத பெண் குழந்தைக் கும் எச்எம்பிவி வைரஸ் உறுதி செய்யப் பட்டுள்ளது. தற்போது அந்த 2 குழந்தைகளுக் கும் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரி வித்துள்ளது. 

குஜராத்தில்...

கர்நாடகத்தை தொடர்ந்து குஜராத்திலும் 2 வயதுக் குழந்தைக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தின் சந்த்கேடாவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் 2 வயது பெண் குழந்தை தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.எச்எம்பிவி வைரஸ் தொடர்பாக கவனமான நடவடிக்கையை மேற் கொள்ள ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 2 பேருக்கு...

கர்நாடகா, குஜராத் மாநிலத்தைப் போன்று  தமிழ்நாட்டில் 2 பேருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன. 

பதற்றம் தேவையில்லை...

இதுதொடர்பாக கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகை யில், “இதுதான் முதல் பாதிப்பு என்று சொல்ல முடியாது. ஏற்கனவே இந்த வைரஸ் பாதிப்பு நாட்டில் உள்ளது. இந்த குறிப்பிட்ட வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்தால்தான் உறுதி செய்யப்படும். தற்போது அதுபோன்ற பரிசோதனை நடத்தப்பட்டதால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவ்வ ளவுதான். பதற்றம் தேவையில்லை. கர்நாட கத்தில் எச்எம்பிவி பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கும் நிலையில், இரு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டுப் பயணங் கள் செய்ததற்கான வரலாறு இல்லை” என  அவர் கூறினார். எச்எம்பிவி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளும் நிமோனியா காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டவை ஆகும். 

புதிய வைரஸ் அல்ல... 

எச்எம்பிவி முதன்முதலில் 2001ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுவாசப் பாதைகளில் பிரச்சனையை ஏற்படுத்தும் வைரஸ் (RSV) ஆகும். நியூமோவிரிடே என்ற வைரஸின் உருமாறியதாகும். எச்எம்பிவி பாதித்தவர்களுக்கான அறிகுறிகள் இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் பிரச்னை மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். இந்த உருமாறிய வைரஸை சீன பிரம்மாண்ட ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது. அறிகுறிகள்... சளி, இருமல், காய்ச்சல், தொண்டை எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை எச்எம்பிவி வைரஸின்  அறிகுறிகளாக கருதப்படுகின்றன. எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு முற்றினால் நிமோனியா காய்ச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். எச் எம்பிவி வைரஸால் பாதிக்கப்படும் சிலருக்கு மூச்சிறைப்பு, சுவாசப் பிரச்சனை போன்றவை அறிகுறிகளாக இருக்கும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்எம்பிவி பெரும்பாலும் சிறு குழந்தைகள், வயதில் பெரியவர்களை தாக்குவதாகவும், இது குறித்து பதற்றம் அடைய தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.  கர்நாடகாவில் கட்டுப்பாடு..  இதனிடையே கர்நாடகாவில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நெரிசல் மிகுந்த பகுதிகளில் முகக்கவ சம் அணிவது மிக அவசியம் என அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.