புதுதில்லி, ஜன.29- பெரும்பாலான தொலைதொடர்பு நிறு வனங்கள் வழங்கும் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங் கள் அதிகபட்சமாக 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக மட்டுமே உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 13 முறை தங்களின் செல்போன் எண்ணை ரீசார்ஜ் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில், வவுச்சர், சிறப்பு டாரிப் வவுச்சர் மற்றும் காம்போ வவுச்சர் ஆகிய வற்றில் தலா ஒரு திட்டத்தின் வேலிடிட்டியா வது 30 நாட்களாக இருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய மான டிராய் (Telecom Regulatory Authority of India) உத்தரவிட்டது. ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய சூழலால் தாங்கள் ஏமாற்றப்படு வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கான புகார்கள் வந்ததன் பின்ன ணியிலேயே டிராய் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது. இதனைத் தொலைத் தொடர்பு நிறு வனங்கள் ஏற்கும்பட்சத்தில் ஓராண்டுக்கு மேற்கொள்ளும் ப்ரீபெய்டு ரீசார்ஜ்களின் எண் ணிக்கை 12 ஆகக் குறையும் என்பதால் இதற்கு மிகுந்த வரவேற்பும் கிடைத்தது.
ஒரே தேதியில் ரீசார்ஜ் செய்யும் வகை யிலான ப்ரீபெய்டு பிளான்களே, உலகளவில் பிரபலமாக இருப்பதால், இந்தியத் தொலை தொடர்பு சேவை வழங்குநர்களும் அதையே பின்பற்றலாமே என்று டிராய் யோசனை தெரி வித்தது. ஆனால் இந்த யோசனையை ஏற்க தனி யார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. விஐ எனப்படும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, “தற்போது நடைமுறையில் உள்ள 28, 54 மற்றும் 84 நாட்கள் ப்ளான் வேலிடிட்டியை மாற்றினால் பில் செய்யும் தேதியில் (பில்லிங் சைக்கிள்) குளறு படி ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் இதைக் கொண்டு சேர்க்க பூதாகரமான முயற்சி களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதே போல் சில்லரை விற்பனை பிரதிநிதிகளுக் கும் பயிற்சிகளை அளிக்க வேண்டியிருக்கும். ஆகையால் தொழில்நுட்ப ரீதியாக இந்தியா வில் ஒரே நாளில், ஒரே தொகுக்கு ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவது எளி தல்ல!” என்று உப்புக்குச் சப்பில்லாத கார ணத்தைத் தெரிவித்துள்ளது. அதேபோல ‘ஏர்டெல்’ நிறுவனமும், “பிரீ பெய்டு வாடிக்கையாளர்களில் பெரும்பாலா னோர் குறைந்த வருவாய் கொண்டோர். அவர்களுக்கு 28 நாட்கள் ரீசார்ஜ் என்பது பட்ஜெட்டாக இருக்கிறது. வாராந்திர அடிப்ப டையில் தங்களின் மொபைல் செலவைக் கண்காணித்துக் கொள்ள உதவுகிறது” என்று மக்கள் மீது அக்கறை இருப்பது போல போலிக் கண்ணீர் வடித்துள்ளது.