திரிபுராவில் மீண்டும் இடது முன்னணி ஆட்சி - சிபிஎம் மாநில செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி நம்பிக்கை
திரிபுராவில் மீண்டும் இடது முன்னணி ஆட்சி அமையும் என சிபிஎம் மாநில செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி கூறியுள்ளார். “ஆளுங்கட்சியின் (பாஜக) அனைத்து முயற்சிகளையும் மீறி, மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும், தைரியத்துடனும் வாக்களித்தனர். எனினும் ஆளுங்கட்சி சில இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தது. கடந்த தேர்தலில் வாக்களிக்கச் செல்லாத அல்லது வாக்களிக்க முடியாத பல புதியவர்களும் வாக்குச் சாவடியில் நிற்பதைக் காணமுடிந்தது. வாக்குப்பதிவு தொடங்கிய உடனேயே சில இடங்களில் பாஜகவினர் பைக்கில் வந்து கள்ள ஒட்டு மூலம் வாக்களிக்க சில நபர்களை வாக்குச்சாவடியில் நிறுத்த முயன்றனர். மேலும் அதிக எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனாலும் பாஜகவின் வீழ்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. திரிபுராவில் மீண்டும் இடது முன்னணி ஆட்சி அமையும்” என அவர் கூறியுள்ளார்.
அகர்தலா, பிப்., 16- திரிபுரா சட்டப்பேரவைத் தேர்த லில் 81.1 சதவீதம் வாக்குகள் பதிவா கின. திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 28.13 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் 20 பெண்கள் உள்பட 259 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் செவ்வாயன்று மாலை நிறைவு பெற்ற நிலையில், வியாழ னன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாநிலம் முழுவதும் மொத்தம் 3,328 வாக்குச்சாவடிகளில் 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை யாக அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கதேச எல்லை வாக்குச்சாவடி களில் எல்லைப் பாதுகாப்புப்படை தனியாக நிறுத்தப்பட்டும், இடது முன்னணி - காங்கிரஸ் பிரதிநிதி கள் கோரிக்கையின் படி மாநிலம் முழுவதும் வாக்காளர்களை யாரும் தடுக்க முடியாத அளவிற்கு 144-வது பிரிவின்படி டிஎஸ்ஆர் போலீஸ் ரோந்து படை பாதுகாப்பையும் மாநில தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியது. இதனால் வாக்காளர்கள் காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிகளில் குவிந்தனர். மாநிலம் முழுவதும் மாலை 4 மணி நிலவரப்படி 81.1% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பாஜக அளித்த பணத்தை வீசி எறிந்த இளம் பெண்
சந்திப்பூர் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடிகளில் பாஜக தலைவர் டிங்கு ராய் தலைமையில் பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்தனர். தன்னிடம் பாஜகவினர் கொடுத்த பணத்தை இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே வீசி எறிந்து தேர்தல் அதிகாரிகளிடம் புகாரளித்தார்.
பாஜகவினர் அட்டகாசம் - தொழிலாளி படுகாயம்
கக்ராபோன் சட்டமன்றத் தொகுதியின் சாவடி எண்-25, ராம்நகர் சட்டமன்றத் தொகுதியின் கலிகாபூர் பகுதி, சந்திராபூரில் உள்ள சமூகக் கல்வி அலுவலகம் ஆகிய வற்றில் ஆளும் பாஜகவினரால் வன் முறை வெடித்தது. சந்திராபூரில் பாஜகவைச் சேர்ந்த பிரசன்ஜித் தத்தா, நிருபன் தத்தா ஆகியோர் வெற்றிலை விற்பனை செய்யும் தொழிலாளியை வாக்களிக்கவிடா மல் தடுத்தனர். ஆனால் அந்தத் தொழிலாளி வாக்களிப்பதில் உறுதி யாக இருந்ததால், அவர் மீது பாஜக கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் அவர் காயமடைந்தார். பின்னர் இடதுமுன்னணி - காங்கிரஸ் கூட்டணி ஊழியர்களின் பாது காப்பில் காயத்துடன் வாக்களித் தார். பெலோனியா சட்டமன்றத் தொகு தியின் வாக்குச் சாவடி எண் 37-ல் பல வாக்காளர்கள் வாக்களிக்க விடாமல் பாஜகவினர் தடுத்துள்ள னர். கக்ராபோன்-ஷல்கரா சட்ட மன்றத் தொகுதியில், சாவடி எண்-3 மற்றும் 4-ல் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முகவர்களை பாஜக வினர் உள்ளே நுழைய விடாமல் தடுத்து அராஜகம் செய்தனர்.
போலி வாக்காளர்களை பிடித்துக்கொடுத்த பத்திரிகையாளர்கள்
தன்பூர் சட்டமன்றத் தொகுதியின் வாக்குச் சாவடி எண் 28-இல் பாஜக களமிறங்கிய போலி வாக்காளர் களை காவல்துறையினர் கண்டு கொள்ளாத நிலையில், பத்திரிகை யாளர்கள் பிடித்து மத்திய பாது காப்புப் படையினரிடம் ஒப்படைத்த னர். சில போலி வாக்காளர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
வாக்குப்பதிவு இயந்திரம் பழுது
40 முதல் 45 மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரம் (EVM) பழுதடைந்த தாகப் புகாரளிக்கப்பட்டதாகவும், ஆனால் அனைத்து இயந்திரங் களும் மாற்றப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டதாக வும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேரம் நீட்டிப்பு
4 மணிக்கு மேலும் வாக்குச்சாவடி களில் வாக்காளர்கள் நீண்ட வரிசை யில் காத்திருந்தனர். இதனால் டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப் பதிவு நேரத்தை 7 மணி வரை நீட்டிக்க மாநில தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்தது.
பாஜக மீது மாணிக் சர்க்கார் குற்றச்சாட்டு
பாஜகவுடன் தொடர்புடைய சமூக விரோதிகள் சில இடங்களில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாக திரிபுராவின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார் குற்றம்சாட்டினார்.