states

நியூஸ் தமிழ் செய்தியாளர் மீதான வழக்கை திரும்பப் பெறுக: சிபிஎம்

சென்னை,ஏப்.25- நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது போடப் பட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: நியூஸ் தமிழ் செய்தியாளர் வினோத் சேலம் மாவட்டத்தில் மக்கள் பிரச்சனை களையும், அரசு அதிகாரிகளின் அலட்சி யப் போக்கினையும் அரசின் கவ னத்திற்கு எடுத்துச் செல்கிறார். இந்த நிலையில் தனது குழந்தைகளை மீட்டுத் தர வேண்டுமென பெற்றோர்கள் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  நல அலுவலரிடம் அணுகியுள்ளனர். அப்போது அந்த அதிகாரி. காவல்துறை யிடம் புகார் அளிக்குமாறும், இங்கு  வர வேண்டாமெனவும் தெரிவித்துள் ளார். இச்செய்தி அறிந்த வினோத் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியைச் சந்தித்து குழந்தையை மீட்டுத் தர வலியுறுத்தியுள்ளார். அப் போது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்து,  பிணையில் வர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ள னர். அரசு அதிகாரி தனது கடமையைச்  செய்ய வேண்டுமென வலியுறுத்தி முறை யிட்டவர் மீது உள்நோக்கத்துடனும், அதி கார துஷ்பிரயோகத்துடனும் செயல் பட்டது வன்மையான கண்டனத்திற்கு ரியது. எனவே, நியூஸ் தமிழ் செய்தியாளர் வினோத் மீது போடப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெற  வேண்டுமெனவும், செய்தியாளர் கள் சுதந்திரமாகவும், ஜனநாயகப்பூர்வ மாகவும் செயல்படுவதற்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்து வதோடு, குழந்தையை மீட்டு பெற்றோர் களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை யும், மாவட்ட நிர்வாகத்தையும் வலி யுறுத்துகிறது.