states

தீக்கதிர் விரைவு செய்திகள்

குஜராத்: தீவிபத்தில் சிக்கிய திருச்சி ரயில்

திருச்சியில் இருந்து குஜ ராத் நோக்கி சென்று கொண்  டிருந்த ஹம்சாபர் விரைவு  ரயில் குஜராத்தின் வால்சத் ரயில்  நிலையத்தில் நின்று, அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ரயி லின் ஜெனரேட்டர் பெட்டியில் தீ  பிடித்தது. ரயில் பெட்டியில் இருந்து தீ வெளியேறுவதை பார்த்ததும், லோகோ பைலட் ரயிலை உடனடியாக நிறுத்தினார்.  ரயிலில் இருந்த பயணிகள் வேக வேகமாக வெளியேற்றப்பட்ட தால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத் திற்கு மின்கசிவு தான் காரணம் என்று கூறப்படுகிறது.

டேனிஷ் அலியை நேரில் சந்தித்து ராகுல் ஆதரவு

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் “சந்திரயான் 3” வெற்றி தொடர்பான விவாதம் வெள்ளியன்று நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது குறுக்கிட்ட தெற்கு தில்லி பாஜக எம்.பி  ரமேஷ் பிதுரி பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலியை தீவிர வாதி என்றும் தகாத வார்த்தைகளாலும் விமர்சித்தார். இந்த நிகழ்வை  பாஜக அமைச்சர்கள் ரசித்தனர். ஆனால் யாரும் தடுக்கவில்லை. அவையில் ரமேஷ் பிதுரியை கண்டிக்கவில்லை. அவர் பேசி முடித்த  பின்பு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்து, அந்த  வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுமாறு அவைத் தலைவருக்கு கோரிக்கை விடுத்தார். அந்த வார்த்தைகளை ஏற்கெ னவே அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டதாக அவையை நடத்திய  காங்கிரஸ் எம்.பி. கே.சுரேஷ் தெரிவித்தார். எனினும் ரமேஷ் பிதுரியை  அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் போர்க்கொடி தூக்கினர். சொந்த கட்சி எம்பி-யை  பாஜக இழிவுபடுத்தினாலும் பகுஜன் சமாஜ் கட்சி பெரியளவில் எதிர்ப்பு  தெரிவிக்காத நிலையில், மக்களவையில் பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி யால் வெறுப்பு பேச்சுக்கு ஆளாக்கப்பட்ட பகுஜன் சமாஜ் எம்.பி.,  டேனிஷ் அலியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ராகுல் காந்தி.

கும்பகோணத்தை மிரட்டும் டெங்கு

தமிழ்நாட்டில் டெங்கு வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்குநாள் அதி கரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட மதுரை, புதுக்  கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணம் மண்டலத்தில் ஒரே நாளில்  மேலும் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்  ளது. கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் கும்பகோணம் மண்டலத்தில் மட்டும்  டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 20-ஐ நெருங்கியுள்ளது. கும்பகோணம், சீர்காழியிலும் டெங்கு பரவல் மிக அதிகமாக உள்ளது என்பது குறிப்பி டத்தக்கது. 

‘அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி’

அஅதிமுக மூத்த தலை வர்களும், முன்னாள் அமைச்சர்களுமான வேலுமணி, சி.வி. சண்முகம், நத்  தம் விஸ்வநாதன், கே.பி. முனு சாமி ஆகியோர் வெள்ளியன்று அவசர அவசரமாக தில்லி புறப் பட்டுச் சென்றனர்.  இவர்கள், பாஜக-வுடனான கூட்டணி தொடர்பாக ஒன்றிய உள்  துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த  இருப்பதாக தகவல் வெளியா னது. இந்நிலையில், பாஜக தேசி யத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்த அதிமுக மூத்த தலை வர்கள், “தமிழ்நாடு பாஜக தலை வர் பதவியிலிருந்து அண்ணா மலையை மாற்ற வேண்டும்; அவ்வாறு மாற்றினால் மட்டுமே  பாஜக உடனான கூட்டணியில்  தொடர்வது பற்றி முடிவெடுக்கப் படும்” என்று வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அதிமுக நிபந்தனை யை ஜே.பி. நட்டா ஏற்க மறுத்து விட்டதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை பல்கலை,  வேளாண், தோட்டக் கலைக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு

சிதம்பரம், செப். 23- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி யில் சுயநிதி வேளாண் பட்டப்படிப்பு மற்றும் தோட்டக்கலை படிப்புகள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட முஸ்லிம் (எம்பிசி) மற்றும் எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான காலி இடங்களுக்கு உடனடி மாணவர் சேர்க்கை வரும் 27 ஆம் மதியம் 12  மணிக்கு  நடைபெறுகிறது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் நேரடியாக பங்கேற்க வேண்டும்.  பொது கலந்தாய்வில் இடம் கிடைத்து கலந்தாய்வை தவறவிட்ட வர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தவறியவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். கலந்தாய்வில் மாணவர் தரவரிசை  நிர்ணயிக்கப்பட்டு அதன்படி மாண வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் உத்தரவாதம் அளிக்க  இயலாது.  மேலும் விபரங்களை https://annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள லாம் என பல்கலை கழகம் தெரிவித் துள்ளது 

ஏ.ஆர்.ரகுமான்  இசை கச்சேரி: தனியார் நிறுவனம் மீது வழக்கு

சென்னை, செப். 23- பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழச்சிக்கு ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்தின் மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி, இம்மாதம் 10 ஆம் தேதி, கிழக்கு கடற்கரை சாலை,  கானாத்தூர், ஆதித்யா ராம் பேலஸ் என்ற தனியார் இடத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியை ஏ.சி.டி.சி., ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய் திருந்தது. காவல்துறையிடம் 20,000 பேருக்கு மட்டுமே அனுமதி கோரியிருந்த நிலையில், 45,000க்கும் அதிகமான பார்வையாளர்கள், நிகழ்ச்சிக்கு வந்தனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் எழுந்தன. அச்சாலையில் வந்த முதல் வரும், வாகன நெரிசலில் சிக்கினார்.  இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அனு மதிக்கப்பட்ட அளவைவிட, அதிகமாக பார்வையாளர்களுக்கு அனுமதி சீட்டு விற்றது தெரிந்தது. இந்நிலையில், இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்த தனி யார் நிறுவனம் மீது, கானாத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பார்வையாளர்களுக்கு முறையான வசதிகள் செய்து தராதது, காவல் துறை வழிமுறைகளை மீறி பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக, அந்த நிறுவனம் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

அசைவ ஓட்டல்களில்  1187 கிலோ இறைச்சி பறிமுதல்

சென்னை, செப். 23- தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து தரமில்லாத உணவுகளை சமைத்து பரிமாறிய உணவகங்கள் மீது பொதுமக்கள் அதிக அளவில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக 307 புகார்கள் பெறப்பட்டு உள்ளன. மேலும்,  அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1187 கிலோ அளவில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 115 கடைகளில் ரூ.1 கோடி 61 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 5 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத வழிபாடு நடத்திய கிறிஸ்தவ குடும்பம் மீது தாக்குதல் - வைகோ கண்டனம்

சென்னை, 23- கிறிஸ்தவ மத வழிபாட்டில் தலையிட்டு, கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் வசிக்கும் ஜான் பீட்டர் என்பவர் தன் வீட்டில் உறவினர், நண்பர்கள் ஜெபம் நடத்து வது வழக்கம். இதை அறிந்த இந்து முன்னணி யினர் செப்டம்பர் 17ஆம் தேதி, யாரும் அங்கு ஜெபம் செய்யக்கூடாது என்று வந்த வர்களை விரட்டி இருக்கின்றனர். அச்சம் காரணமாக அனைவரும் திரும்பிப் போய்விட்டனர். ஆனால் ஜான் பீட்டர் மட்டும் தன் குடும்பத்தினருடன் வீட்டிற்குள் ஜெபம் செய்துள்ளார். அப்போது முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று கைகளில் கம்பு  தடியோடு வாசலிலேயே காத்திருந்திருக் கின்றனர். ஜெபம் முடிந்து ஆறு பேர் வெளியே வந்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் மீது கொலை வெறித் தாக்குதலை அந்தக் கும்பல் நடத்தி உள்ளது. கிறிஸ்தவ மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்த  ஜான் பீட்டர் குடும்ப உறவினர்களை கொலை வெறிக் கொண்டு தாக்கிய கும்பல்,  இந்து முன்னணியினர் என்று காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.  ஒருவர் தன் வீட்டில் மத வழிபாடு செய்வது  என்பது அவருடைய சொந்த விருப்பத்தைப் பொறுத்தது. அதைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. மதவெறிக் கூட்டத்தின் இத்தகைய நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் காவிக் கும்பல் மதவெறி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கிறிஸ்தவ மத வழிபாட்டில் தலை யிட்டு, கொலைவெறித் தாக்குதல் நடத்திய வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் திட்டமிட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்தி, அரசுக்கு நெருக்கடி  தர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் மதவெறி அமைப்புகள் அரசியல் நோக்கத்தை  முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.