மேட்டூர், ஆக.6- காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆதார மான மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந் துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப் படும். இந்த காலகட்டத்தில் 330 டி.எம்.சி. தண்ணீரைப் பயன்படுத்தி குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் பயிர்கள் விளை விக்கப்படும். வழக்கமான நடைமுறைப்படி கடந்த ஜூன் 12 மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அன்றைய தினம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. பாச னத்திற்காக 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப் பட்ட நிலையில், இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 13 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து பெரு மளவு குறைந்தது. இதனால் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப் பட்டது.இந்நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. வழக்கமாக ஆடிப்பெருக்கின் போது வெள்ளமாய் ஓடும் காவிரி நதி கொளத்தூர், பண்ணவாடி ஆகிய இடங்களில் ஓடை போல சுருங்கி விட்டது. நீர்மட்டம் 60 அடிக்கும் கீழாக குறைந்து விட்ட நிலையில், அணையில் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை 2 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வெளியே தெரிந்தது. தற்போதைய நீர் இருப்பு 24 டி.எம்.சியாக மட்டுமே உள்ளது. இதனால் மேட்டூர் அணை யின் 16 கண் பாலம் பகுதி நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மேட்டூர் அணை நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது . இந்த பயிர்களை காப்பாற்ற தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை உடனே விடுவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.