states

ஒன்றிய அரசுத் தேர்வாணையம் மண்டல வாரித் தேர்வுகளை நடத்த வேண்டும்!

பாஜக பதவியேற்ற 2014 முதல் ரயில்வே, தபால், வருமானவரி, கணக்குத் தணிக்கைத் துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் 95 சதவிகி தத்திற்கு மேல் பெரும்பாலும் இந்தி பேசும் மாநிலங்களிலிருந்தே நியம னங்கள் நிகழ்வதைக் காண முடிகிறது. ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வா ணையம் (Staff Selection Commission) உச்சநீதி மன்றத்தின் ஒரு தீர்ப்பைக் காரணம் காட்டி மண்டல வாரியாக முன்பு நிகழ்ந்து கொண்டிருந்த ஒன்றிய அரசு நியமனங்க ளை அகில இந்திய அளவிலான நியமனமாக மாற்றி விட்டது.   அப்போதிலிருந்து தொடர்ந்து இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களே பெருமளவில் நியமனம் பெற்றுக் கொண்டிருப்பதானது இந்தத் தேர்வின் மீதே ஐயம் கொள்ள செய் கிறது.  இதன் காரணமாக நியமனம் செய்யப்படும் உள்ளூர் மொழிகள் அறியாதவர்கள் மாநில மக்களுக்குச் சேவை செய்யவும் முடிவதில்லை.  மாறாக அவர்களது ஒரே இலட்சியம் தமது சொந்த மாநிலங்களு க்கு மாறுதல் பெறுவதாகவே உள்ளது. அதனால் காலியிடங்களைப் பூர்த்தி செய்யும் நோக்கமும் நிறைவேற வில்லை. எனவே, இந்த மாநாடு ஒன்றிய அரசுத் தேர்வாணையம் மீண்டும் மண்டல வாரியான தேர்வுகளை நடத்த வேண்டுமென்றும், காலியிடங்களை நிரப்பும்போது அந்தந்த மாநிலங்கள் தமக்கான நியாயமான பங்கை பெறும் வகையில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த, உள்ளூர் மொழியை அறிந்த வர்களுக்கே நியமனம் வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்றம் அதற் குரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டு மெனவும் கோருகிறது.