ஏழை மக்களை நெருக்கடியில் தள்ளியிருக்கும் ஒன்றிய அரசு பெட்ரோலிய பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறி, அந்த நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.22 ஆயிரம் கோடியை இழப்பீட்டுத் தொகையாக கொடுத்துள்ளது.
புதுதில்லி, மார்ச் 11- சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது 1,018 ரூபாயைக் கடந்துள்ள நிலையில், அவற்றிற்கு ஒன்றிய அரசால் வழங்கப்படும் மானி யம் ஒவ்வொரு ஆண்டும் குறைக் கப்பட்டு கொண்டே வருகிறது. 2018 - 2019 நிதியாண்டில் ரூ. 37 ஆயிரத்து 209 கோடியும் 2019 - 2020 நிதியாண்டில் ரூ. 24 ஆயிரத்து 172 கோடியும் 2020-2021 நிதியாண்டில் ரூ.11 ஆயிரம் 896 கோடியும் மானி யமாக வழங்கப்பட்டது. இவ்வாறு படிப்படியாக குறைக்கப்பட்டுக் கொண்டே வந்த மானியத் தொகை, கடந்த 2021-2022 நிதியாண்டில் பல மடங்கு குறைக் கப்பட்டு, தற்போது வெறும் ரூ. ஆயி ரத்து 811 கோடி என்ற அளவிற்கு தள்ளப்பட்டு உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள், பெண்களைக் குடும் பத் தலைவராக கொண்ட குடும் பங்களுக்கு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 2016-ஆம் ஆண்டு 8 கோடி இணைப்புகளுக்கு மானி யம் வழங்கப்பட்டது. இந்த இணைப்புகளின் எண்ணிக்கையா னது 2023-ஆம் ஆண்டில் வெறும் 1.6 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 6.5 கோடி குடும் பங்கள் மானியமல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்குவதற் கான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள் ளன. இவ்வாறு ஏழை மக்களை நெருக் கடியில் தள்ளியிருக்கும் ஒன்றிய அரசு பெட்ரோலிய பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறி, அந்த நிறுவனங்களுக்கு மட்டும் ரூ. 22 ஆயிரம் கோடியை இழப்பீட்டுத் தொகையாக கொடுத்துள்ளது.
மோடி அரசுக்கு ரூ.2.2 லட்சம் கோடி மிச்சம்
பயனாளிகள் வங்கிக் கணக் கிற்கு நேரடியாக மானியம் செலுத் தும் முறையால் இதுவரை ரூ.2.2 லட்சம் கோடி நிதி சேமிக்கப்பட்டி ருப்பதாக பொருளாதார விவகாரத் துறை செயலாளர் கூறி உள்ளார். நிதிச் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பெறுவதற்கான உல களாவிய கூட்டமைப்பின் 2-ஆம் ஆண்டு கூட்டம் அண்மையில் ஹைத ராபாத்தில் நடைபெற்றது. இதில், ஒன்றிய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகா ரங்கள் துறை செயலாளர் அஜய் சேத் பங்கேற்று பேசுகையில்தான், ‘‘இந் தியாவால் உருவாக்கப்பட்ட டிஜிட் டல் பொது உள்கட்டமைப்பு புதுமை யானது, அனைவரையும் உள்ளடக்கி யது. இது மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான நிதி தொடர்புகளி லும், வணிகத்திற்கும் மக்களுக்கும் இடையேயான நிதி தொடர்புகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள் ளது. மேலும், முக்கிய அரசுத் திட் டங்களில் பயனாளிகளுக்கான மானி யம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதன் மூலம் இதுவரை நாட்டிற்கு ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி மிச்ச மாகி உள்ளது. அதோடு, விரைவாக பலன்கள் மக்களை சென்றடைவ தோடு, ஊழலும் முற்றிலும் நீக் கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள் ளார்.