தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். சிபிஐ விசாரணை வேண்டும் என மனுதாரர் கோரவில்லை; நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மொத்த மாக 26,76,675 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளதாக பள்ளி கல்வித் துறை தகவல் தெரி வித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9,55,474 மாணவர்கள், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8,83,884 மாணவர்கள், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8,37,317 பேர் எழுதுகின்றனர்.
தமிழர்களின் வரலாறுகளை தேடி பயணிக்கும் திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். எகிப்து போன்ற நாடுக ளிடம் பேசி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கு தேசிய அளவிலான திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் அடுத்த 45 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எகிப்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 90க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.