புதுதில்லி, மே 27 - மோடியின் 9 ஆண்டு ஆட்சி யில் தீர்க்கப்படாத 9 முக்கியப் பிரச்சனைகளை வரிசைப்படுத்தி, காங்கிரஸ் கட்சி ஒன்றிய பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அவை வருமாறு:
1. பொருளாதாரம்: இந்தியா வில் பணவீக்கமும் வேலை யின்மையும் ஏன் உயர்ந்து வரு கிறது? பணக்காரர்கள் பணக் காரர்களாகவும், ஏழைகள் ஏழைக ளாகவும் மாறியது ஏன்? பொருளா தார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுச் சொத்துக்கள் பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்படுவது ஏன்? 2. விவசாயம் : வேளாண் சட் டங்களை ரத்து செய்யும் போது விவசாயிகளுடன் செய்து கொள் ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏன் மதிக் கப்படவில்லை? குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) ஏன் சட்டப் பூர்வமாக உத்தரவாதம் அளிக் கப்படவில்லை? கடந்த
3 ஆண்டுக ளாக விவசாயிகளின் வருமானம் ஏன் இரட்டிப்பாகவில்லை?ங்கள் நண்பர் அதானிக்கு பயனளிக்கும் வகையில் எல்ஐசி மற்றும் ஸ்டேட் பாங்க் இந்தியா- வில் (SBI) மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பை ஏன் பணயம் வைக்கிறீர்கள்? திருடர்களை ஏன் தப்பிக்க விடுகிறீர்கள்? பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழலைப் பற்றி நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள், ஏன் இந்தியர் ளைக் கஷ்டப்பட வைக்கிறீர்கள்?
4. சீனாவும் தேசியப் பாது காப்பும் : 2000 ஆம் ஆண்டில் சீனா வுக்கு நீங்கள் க்ளீன் சிட் கொடுத்த பிறகும், அவர்கள் இந்திய நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஏன்? சீனா வுடன் 18 சந்திப்புகள் நடத்தப் பட்டுள்ளன, ஆனால் அவர்கள் ஆக்கிரமித்துள்ள பிரதேசத்தை கொடுக்க மறுத்து வருகின்றனரே ஏன்?
5. சமூக நல்லிணக்கம் : ஏன் வேண்டுமென்றே வெறுப்பு அரசி யலை தேர்தல் ஆதாயங்களுக் காகப் பயன்படுத்துகிறீர்கள், மக்க ளிடையே அச்சச் சூழலைத் தூண்டுகிறீர்கள்?
6. சமூக நீதி : உங்கள் அடக்கு முறை அரசாங்கம் ஏன் சமூக நீதியின் அடித்தளத்தை அழிக்கி றது? பெண்கள், தலித்துகள், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்கொடுமைகளை திணிக்கி றீர்கள்?சாதிவாரிக் கணக்கெடுப்பு கோரிக்கையை ஏன் புறக்க ணிக்கிறீர்கள்?
7. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி: கடந்த
9 ஆண்டுகளில் நமது அரசியல் சாசன விழுமி யங்களையும் ஜனநாயக அமைப் புகளையும் ஏன் பலவீனப் படுத்தினீர்கள்? எதிர்க்கட்சிக ளையும், உங்களிடம் கேள்வி கேட்பவர்கள் மீதும் பழிவாங்கும் அரசியலை ஏன் நடத்துகிறீர்கள்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சீர்குலைக்க அப் பட்டமான பணபலத்தை ஏன் பயன் படுத்துகிறீர்கள்? 8.நலத்திட்டங்கள்: ஏழைகள் மற்றும் பழங்குடியினர் நல னுக்கான திட்டங்கள், அவர்களின் வரவு - செலவுத் திட்டங்களைக் குறைத்து, கட்டுப்பாட்டு விதி களை உருவாக்குவதன் மூலம் பலவீனப்படுத்தப்படுவது ஏன்? 9. கோவிட்-19 தவறான நிர்வா கம் : கோவிட்-19 காரணமாக 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக இறந்தாலும், மோடி அரசாங்கம் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மறுத்தது ஏன்? லட்சக்கணக்கான மக்கள் வீடு திரும்ப வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் வகையில் நீங்கள் ஏன் திடீரென்று பொதுமுடக்கத்தை அறிவித்தீர்கள், மேலும் மக்க ளுக்கு ஏன், எந்த ஆதரவையும் வழங்கவில்லை?