states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

இலவச சமையல் வாயு எனும் ‘‘உஜ்வாலா யோஜனா’’ திட்டம் மக்களுக்கு நன்மை அளிப்பதைவிட மோடியின் பிரச்சாரத்துக்கும் வாய்ப்பந்தலுக்கும்தான் பயன்பட்டுள்ளது. 2021-22இல் கிட்டத்தட்ட 1 கோடி பேர் இலவசமாக கொடுத்த சிலிண்டருக்கு பின்னர் அடுத்த சிலிண்டரை வாங்கவில்லை. மேலும் ஒரு கோடி பேர் ஒரே ஒரு முறைதான் சிலிண்டரை வாங்கினர்; இரண்டாவது முறை வாங்கவில்லை. காரணம்: மிக அதிக விலை!

இந்தியாவில் 98 சதவீத குடும்பங்கள் எல்.பி.ஜி. சமையல் வாயு பயன்படுத்துகின்றனர் என மோடி அரசாங்கம் கூறுகிறது. ஆனால், 40 முதல் 80 சதவீதம்தான் எல்.பி.ஜி. உட்பட பசுமை எரிசக்தியை பயன்படுத்துகின்றன என தேசிய குடும்ப மாதிரி ஆய்வு கூறுகிறது. பொய்களை மூலதனமாகக் கொண்டு பிரச்சாரமும் வாயால் வடை சுடுவதும் தான் நடக்கின்றது.