states

மின்நுகர்வை துல்லியமாக கணக்கிட 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் வாங்க டெண்டர்

சென்னை, ஜூன் 5- தமிழ்நாட்டிலிருந்து தற்போது ஒவ்வொரு வீட்டிலும் எப்படி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து மீட்டர் அளவீட்டை கணக்கிட்டு முடிவு செய்கி றார்கள். அவர்கள் கணக் கிட்டு எழுதும் யூனிட் அடிப் படையில் பொதுமக்கள் மின்சார கட்டணம் செலுத்தி  வருகிறார்கள். இந்த நடை முறைக்கு பதில் மின்சார பயன்பாடு அளவை மிக எளி தாக, துல்லியமாக கணக்கிட  ‘ஸ்மார்ட் மீட்டர்’ இணைப்பு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு மறு சீரமைக்கப் பட்ட மின் விநியோக திட்டத்தின் கீழ் மானியம் வழங்குகிறது.  தமிழ்நாட்டில் முதலில் பரீட்சார்த்த அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் சென்னை தி.நகரில் செயல்படுத்தப்பட்டது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தி.நகரில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடு களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

இது வெற்றிகரமாக அமைந் துள்ளது.  இதையடுத்து, தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளி லும் ஸ்மார்ட் மீட்டர் மின்  இணைப்பை நடை முறைக்கு கொண்டுவர தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன் படி, திங்களன்று (ஜூன் 5)  ஸ்மார்ட் மீட்டர் கொள்முத லுக்கான டெண்டர் வெளி யிடப்பட்டது. ஸ்மார்ட் மீட்டர்  பொருத்தும் திட்டத்தை  3 கட்டமாக செயல்படுத்த  ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. முதல்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், தரும புரி உள்பட 12 வட மாவட்டங் களில் நடைமுறைக்கு வரும்.  அதன் பிறகு 2-வது, 3-வது கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். இந்த திட்டத்துக்காக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்கப்பட உள்ளன. இதில்  முதல்கட்டமாக 13 மாவட்டங் களில் 1 கோடியே 17 லட்சம்  ஸ்மார்ட் மீட்டர்கள் பயன் படுத்தப்படும். 2-வது கட்டமாக 1 கோடியே 2  லட்சம் ஸ்மார்ட் மீட்டர்க ளும், 3-வது கட்டமாக சுமார்  80 லட்சம் ஸ்மார்ட் மீட்டர் களும் பயன்படுத்தப்படும்.  தற்போது விடப்பட் டுள்ள டெண்டர்கள் குறித்து  அடுத்த 45 நாட்களில் இறுதி முடிவுகள் மேற்கொள் ளப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல் படுத்தினால்தான் ஒன்றிய  அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத் தின் கீழ் மானியத்தை பெற  முடியும் என்று கூறப்படு கிறது.