states

தீக்கதிர் விரைவு செய்திகள்

திருச்சூரில் பூரம் நடந்த இடத்துக்கு ஆம்புலன்ஸில் செல்லவில்லையாம் அம்பலமான சுரேஷ் கோபியின் பொய்

கேரள மாநிலம் திருச்சூர் பூரம் திருவிழாவுக்கு ஆம்புலன்சில் செல்லவில்லை என ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறியது பொய் என அம்பலமாகி உள்ளது. சேலக்கராவில் தேசிய ஜனநாயக கூட் டணியின் (என்டிஏ) தொகுதி மாநாட்டை துவக்கி வைத்து சுரேஷ் கோபி பேசுகை யில்,”திருச்சூர் பூரத்துக்கு பாஜக, மாவட்ட தலைவரின் காரில்தான் சென்ற தாகவும், ஆம்புலன்சில் வந்ததை பார்த்த தாக கூறுவது மாயத்தோற்றம் எனவும் கூறினார். ஆனால் சேவா பாரதியின் ஆம்புலன்சில் சுரேஷ் கோபிபூரம் திரு விழா திடலுக்கு வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. எனினும் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் பேசியதே சுரேஷ் கோபி கூறுவது பொய் என்பதை அம்பலப்படுத்தியது. இதுதொடர்பாக அவர் பேசுகையில்,”பூரத்தை நடத்தவே ஆம்புலன்சில் சுரேஷ் கோபி சென்றார். சீர்குலைக்க அல்ல” என்றார். ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பொய் சொன்னார் என்பது அதே மேடையி லேயே வெட்ட வெளிச்சமானது.

இன்று  அரை நாள் விடுமுறை

சென்னை, அக். 29 - தீபாவளி பண்டிகையை ஒட்டி, நவம்பர் 1-ஆம் தேதி அரசு விடுமுறை அளிக்கப் பட்ட நிலையில், புதன்கிழ மையும் (அக். 30) பிற்பக லுக்குப் பிறகு, பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து அரசு  உத்தரவிட்டுள்ளது. சொந்த ஊர் செல்லும் பய ணிகள் விரைவாக சிரமம் இன்றி புறப்பட ஏதுவாகவும், தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையிலும் இந்த அறி விப்பை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது.

உடை விவகாரம்:  அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை, அக். 29 -  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களில் தமிழ்க் கலாச்சார உடை அணிய வேண்டும் என்று உத்தரவிட கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  துணை முதலமைச்சர் டி-சர்ட் அணிவது அர சாணைக்கு எதிரானது என்று  மனுதாரர் தெரிவித்திருந் தார். அரசு ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர் களுக்கு பொருந்துமா..? என  பதில் மனு தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

புதிய உச்சத்தை  தொட்டது  தங்கம் விலை

சென்னை, அக். 29 -  கடந்த சில நாட் களாகவே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில், செவ்வாய்க்கிழ மை (அக்.29) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 60 அதிகரித்து 7,375 ரூபாய்க்கும், சவரனு க்கு ரூ. 480 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 59 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.

கூட்டுறவு, சர்க்கரை ஆலை  ஊழியர்களுக்கு போனஸ்!

சென்னை, அக். 29 - தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு  மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. இங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, தீபாவளியையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்க ஆணையிட்டுள்ளார். அதனடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்பிர மணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியம் 8.33 சதவிகிதம் மற்றும் கருணைத் தொகை 11.67 சதவிகிதம் என மொத்தம் 20 சதவீத போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33 சதவிகிதம் மற்றும் கருணைத் தொகையாக 1.67 சதவிகிதம் என மொத்தம் 10 சதவிகித போனஸ் வழங்கவும் ஆணையிட்டுள்ளார். தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக பணியாளர்களும், வனத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவன பணியாளர்களுக்கும் ஒரே அளவில் 20 விழுக்காடு போனஸ் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை:   விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்வு

சென்னை, அக். 29 - தீபாவளி பண்டிகை வியாழக்கிழ மை (அக்.31) அன்று கொண்டாடப்படு கிறது.  4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள மக்கள் ரயில்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், விமான ங்கள் மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச்செல்கின்றனர். இந்த பண்டிகைக் கால பயணத் தேவையைப் பயன்படுத்தி, விமான நிறுவனங்கள் கட்டணங்களைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளன. தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், தில்லி, கொல்கத்தா விமானக் கட்டணங் களும் அதிரடியாக உயர்ந்துள்ளது.  சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண கட்டணம்  ரூ. 4,109. தற்போது ரூ. 8,976  முதல் ரூ. 13,317 வரை உயர்ந்துள் ளது. சென்னையில் இருந்து மது ரைக்கு சாதாரண கட்டணம் ரூ.  4,300, தற்போது, ரூ. 11,749 முதல் ரூ. 17,745 வரை உயர்ந்துள்ளது.  கோவைக்கு ரூ. 3,474-ஆக இருந்த கட்டணம் ரூ. 7,872 முதல் ரூ. 13,428 வரை உயர்ந்துள்ளது. சேலத்திற்கு சாதாரண நாட்களில் ரூ. 3,300 ஆக இருந்த கட்டணம், ரூ. 8,353 முதல் ரூ. 10,867 வரை உயர்ந்துள்ளது. திருச்சிக்கு ரூ. 2,382-ஆக இருந்த விமான கட்டணம் ரூ. 8,211முதல் ரூ.10,556 வரை உயர்வு. அந்தமானுக்கு ரூ.5,479-ஆக இருந்த விமான கட்டணம் ரூ.9,897 முதல் ரூ.10,753வரை உயர்ந்துள்ளது. விமான கட்டண உயர்வு பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்கவுண்ட்டர்கள்:  மனித உரிமை  ஆணையத்தில் காவல்துறை அதிகாரிகள் ஆஜர்

சென்னை, அக். 29 - சென்னையில் பகுஜன் கட்சி மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப் பட்ட திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி மற்றும் சீசிங் ராஜா, புதுக் கோட்டையில் துரைசாமி ஆகி யோர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட னர். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக, நான்கு காவல் ஆய்வா ளர்கள், அதில் விசாரணை அதிகாரி களாக உள்ளவர்கள் என என் கவுண்ட்டரில் தொடர்புடையவர்கள் அனைவரும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி மணிக் குமார் முன்னிலையில் செவ்வாயன்று (அக். 29) ஆஜராகி உள்ளனர்.

புறம்போக்கில் குடியிருப்போரை அப்புறப்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறைக்கு கண்டனம்

திண்டுக்கல், அக்.29- புறம்போக்கு நிலத்தில் 30 ஆண்டு களாக குடியிருந்து வரும் மக்களை இந்து சமய அறநிலையத்துறை அதி காரிகள் தங்கள் நிலத்தில் குடியிருப்ப தாகக் கூறி அப்புறப்படுத்த முயற்சிப் பதற்கு அடிமனை பயனாளிகள் சங்கம்  கண்டனம் தெரிவித்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் உள்ளது சௌந்திரராஜ பெருமாள் கோவில். இங்குள்ள புறம்பாக்கு நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த  கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில்  தான் இம்மக்கள் குடியிருக்கிறார்கள் என்று கூறி அவர்களை அப்புறப்  படுத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அறநிலையத்துறை சட்டம் 78 மற்றும் 79 பயன்படுத்தி மூன்று முறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு அடிமனை பயனாளிகள் சங்கம் சார்பாக கண்டனம் தெரி விக்கப்பட்டது. மேலும் இந்த தகவல்  அறிந்து தமிழ்நாடு அடிமனை பய னாளிகள், குத்தகை விவசாயிகள் பாது காப்பு சங்க மாவட்டச் செயலாளர் ஆர். தயாளன், துணைத் தலைவர் ஆர்.ராஜேந்திரன், சிபிஎம் வடமதுரை ஒன்றி யச் செயலாளர் மலைச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சண்முகம்,  மீனாட்சிசுந்தரம் ஆகியோர் தலை யிட்டு அறநிலையத்துறை அதிகாரி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் 30 ஆண்டுகளாக வசிக்கும்  மக்களை அங்கிருந்து அப்புறப் படுத்தக்கூடாது என்று மனுக்கொடுக் கப்பட்டது.