திருநெல்வேலி, அக்.27- தீபாவளி முடிந்து சென்னை செல்ல ஏதுவாக நெல்லையில் இருந்து தென்காசி மார்க்கமாக சிறப்பு ரயில் சென்னைக்கு இயக்கப்படு கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே இம்முறை சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை போன்ற நகரங்களுக்கு சிறப்பு ரயில்களை இரு மார்க்கத்திலும் இயக்குகிறது. இதுதவிர தென்காசி மார்க்கமாக கொல்லத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் ஹூப்ளிக்கும் சிறப்பு ரயிலை இயக்குகிறது. நெல்லை - தென்காசி மார்க்கத்தி லும் சிறப்பு ரயில்களை இயக்கிடும் நோக்கில் தீபாவளி முடிந்த பின், பொதுமக்களுக்கு நகரங்களுக்கு செல்ல வசதியாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி வண்டி எண் 06003 நெல்லை- தாம்பரம் சிறப்பு ரயில், வரும் நவம்பர் 3ஆம் தேதி மாலை 4 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மாலை 5.25 மணிக்கு தென்காசி செல்கிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.10க்கு சென்னை தாம்பரம் ரயில் நிலையம் சென்று சேருகிறது. மறு மார்க்கத்தில் வண்டி எண் 06004 தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில், நவம்பர் 4ம் தேதி பகல் 2.30க்கு தாம்ப ரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.05 மணிக்கு தென்காசி வருகிறது. அன்றைய தினம் காலை 5.15க்கு நெல்லை வந்து சேருகிறது. இந்த ரயில் சேரன்மகாதேவி, கல்லி டைக்குறிச்சி, அம்பாச முத்திரம், கீழ்கடையம், பாவூர்ச்சத்தி ரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுந கர், திருமங்கலம், மதுரை, சோழ வந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல் மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கு முன்பதிவு நடந்து வருகிறது. இந்த ரயிலில் ஒரு ஏசி இரண்ட டுக்கு பெட்டி, 2 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 10 ஸ்லிப்பர் பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுதிற னாளிகளுக்கான பெட்டிகள் இடம் பெற்றிருக்கும்.