சென்னை, செப்.26- சிறு, குறு தொழில் நிறுவ னங்களின் கோரிக்கை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வலியுறுத்தி யுள்ளார். இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை வரு மாறு:- தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவ னங்கள் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், நிலைக் கட்ட ணம் வசூலிப்பதை கைவிட வேண்டும், தொழில் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் அடர்த்தி யான மின் நுகர்வு நேர கூடுதல் கட்டணத்தை முழு மையாக விலக்கிக் கொள்ள வேண்டும். மின் கட்டண பட்டி 3 ஏ 1 க்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை முன் வைத்து, அரசின் கவனத்தை குறிப் பாக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் நேரடி நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்த நிலையில் சிறு, குறு தொழில்துறை அமைச் சர், தொழில் நிறுவனங் களின் பிரதிநிதிகளை அழைத்து பேசும் அரசின் அணுகுமுறை வரவேற்கத் தக்கது. இருப்பினும் தமிழ் நாட்டு வேலை வாய்ப்பு, பொருளாதார சுயசார்பு, பொருள் உற்பத்தி மற்றும் தயாரிப்பு போன்றவற்றில் பெரும் பங்களிக்கும் ஜவுளி, மின் பொருள் உற்பத்தி, இயந்திரங்கள் தயாரிப்பு, உப பொருட்கள் தயாரிப்பு என பரந்துபட்ட அளவில் நடந்து வரும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் கள் மீதும், அதன் முதலீட் டாளர்களின் கோரிக்கைகள் மீதும் தமிழ்நாடு முதல்வர் நேரடியாக தலையிட்டு பேசுவது, தீர்வு காண்பது உடனடித் தேவையாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.