states

ஜூன் 20ல் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

சேலம், மே 12- டாஸ்மாக் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 20 அன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்மேள னக்குழு கூட்டம் சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சம்மேளன தலைவர் இ.பொன் முடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில், டாஸ்மாக் ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் அரசு ஊழியர்களா? அல்லது டாஸ்மாக் நிறுவனத்தின் ஊழியரா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். உயர் மதிப்பு ஓய்வூதிய பண பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் ஊழியர்க ளுக்கும் இஎஸ்ஐ மருத்துவ வசதி அமல் படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களி டம் கட்டாய வசூலில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் மொத்த வருவாயில் அதிக லாபம் ஈட்டி தரும் டாஸ்மாக் பணி யாளர்களின் ஊதியத்தை உயர்த்தி, பணி யாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அரசு மதுபான கடைகளில் வசூலாகும் பணத்தை கொண்டு செல்லும் வழியில் சமூக விரோதிகளால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு பல தொழிலாளர்கள் மரணமடைகின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் பணியா ளர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 20 அன்று மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  இக்கூட்டத்தில் சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், பொருளா ளர் சந்திரன், சேலம் மாவட்ட செயலாளர் விஜயகுமார் உட்பட மாநிலம் முழுவதி லும் இருந்து சம்மேளன குழு உறுப்பினர் கள் பங்கேற்றனர்.