states

img

இந்தியாவின் முதல் ‘ஹைபிரிட் ராக்கெட்’ வெற்றிகரமாக ஏவப்பட்டது

சென்னை, பிப்.19-  சென்னை மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை, கிழக்கு கடற்  கரை சாலை கடற்கரையில் இருந்து  பிப்ரவரி 19 அன்று இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் 150 சிறிய ரக செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டது. ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இண்டர் நேஷனல் பவுண்டேஷன் சார்பில் இந்த ராக்கெட் ஏவப் பட்டது. இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் ஆனந்த் தலைமையிலான இஸ்ரோ தொழில்நுட்ப விஞ்ஞானிகள் இந்த ராக்கெட்டை இயக்கினர். இதில் தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் வெங்கட்ராமன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி உள் பட பலர்  கலந்து கொண்டனர்.  ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் எனப்படுவது குறைந்த உயரத்தில் செலுத்தக் கூடியதாகவும், சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்து வதற்காகவும், செயற்கைக் கோள்  களின் தரவுகளை சேகரிப்பதற்காக வும் அனுப்பப்படுகிறது. தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் சுமார்  2.4 கி.மீ. உயரம் வரை செல்லக் கூடி யது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 3,500 பேர்  இணைந்து தயாரித்த 150 சிறிய ரக  செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்  டுள்ளது.   ஏவப்பட்டுள்ள சிறிய ரக செயற்  கைகோள்கள் மூலம் வானிலை, கதிர்  வீச்சு தன்மை, வளிமண்டல நிலை  உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெற  முடியும் என்று தெரிவிக்கப்படு கிறது.