states

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.860 கோடியில் சாகர் மாலா திட்டம்

சென்னை, ஏப். 11- வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ரூபாய் 860 கோடியில் 13 சாகர் மாலா திட்டங்களை பூர்த்தி செய்துள்ளது என்று துறைமுக ஆணையத்தின் தலைவர் டி.கே. ராமச்சந்திரன் தெரிவித்தார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய வ.உ.சி. துறைமுக ஆணையத்தின் தலைவர் டி.கே.ராமச்சந்திரன் மேலும் கூறுகையில்,“கடலோர சரக்குகள் இறக்கும், ஏற்றும் தளம் தற்போதுள்ள நிலக்கரி துணை துறைமுகத்தை மேம்படுத்துதல், கடலோர சரக்குகள் ஏற்றி இறக்கும் பகுதியை ஆழப்படுத்துதல், சரக்கு பெட்டக முனையமாக எட்டு தளங்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவை இந்த திட்டங்களில் அடங்கும்” என்றார். தற்போது 3 பெரிய சாகர்மாலா திட்டங்கள் நடை முறை யில் உள்ளன என்றும் ரூ.807 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டங்களின் மூலம் துறைமுகத்தின் திறன் ஆண்டுக்கு 7.2 மில்லியன் மெட்ரிக் டன் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும்  ரூ.7,500 கோடி செலவில் வெளிப்புற துறைமுகத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் கிழக்கு கடற் பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் இடமாக வ.உ.சி. துறைமுகத்தை மாற்றும் திட்டமும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.