states

வாழ்வாதாரத்தை பாதிக்கிற சுற்றறிக்கையை திரும்பப்பெற்று ஓட்டுனர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்த நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை, செப்.16- வாழ்வாதாரத்தை பெருமளவு பாதிக்கிற சுற்றறிக்கையை திரும்பப்  பெற்று, ஓட்டுநர் பயிற்சி பள்ளி மாண வர்களுக்கு தேர்வு நடத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்  நாடு ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமை யாளர்கள் கூட்டமைப்பு, போக்கு வரத்து ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டு நர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒட்டுமொத்த தரைவழி போக்கு வரத்து துறையை பெருமுதலாளி களுக்கும், பன்னாட்டு நிறுவனங்க ளுக்கும் வழங்க துடிக்கிறது ஒன்றிய அரசு .ஒன்றிய அரசின் தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் பிறப்பிக்கும் பல உத்தரவு களால் பாதிக்கப்பட்டு வாழ்வாதா ரத்தை இழந்த போக்குவரத்து சார்ந்த தொழில்களை செய்யும் உரிமையா ளர்களும், பணியாளர்களும் உள்ள பட்டியலில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி  உரிமையாளர்களும், பயிற்சியா ளர்களின் பணியாளர்களும் சேர்க்  கப்பட்டு நடுத்தெருவுக்கு தள்ளப்  பட்டு அவல நிலையில் உள்ளனர். தமிழக அரசு பொறுப்பேற்றதும், தமிழக முதல்வர் எங்கள் காயங்க ளுக்கு மருந்து போடும் விதமான ஆட்சியாக இருக்கும் என நம்பிக் கொண்டிருந்த நேரத்தில், “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்” தமிழக போக்குவரத்து துறையின்  சில சுற்றறிக்கைகள் எங்கள் தொழிலை நசுக்கும் வண்ணமாகவும், தரகர்  களை ஊக்குவிக்கும் வண்ணமும்,  ஊழலை பன்மடங்கு பெருக்கும் நோக்  கத்தோடு மட்டும் வெளியிடப்பட்டுள் ளது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

தமிழகத்தில் தலைவிரித்தாடும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பற்றாக்குறை என்ற முக்கிய பிரச்  சனை இத்துறையின் சில அதிகாரி களால் மூடி மறைக்கப்பட்டு அதிகப்  பணிச்சுமையின் காரணமாக தரம் குறைந்துபோன ஓட்டுநர் உரிம தேர்வு களால் சாலை பாதுகாப்பு மட்டும் கேள்விக்குறியாக்கப்படவில்லை; தமிழக மக்களின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக,  போக்குவரத்து துறைக்கு எந்த ஆணையர் வந்தாலும் அவரை தவ றாக வழி நடத்தும் கீழ்நிலை அதிகாரி களின் மனநிலை எங்களுக்கு மிகுந்த வேதனையை தருகிறது. ஒரு அரசின் சுற்றறிக்கை அல்லது ஒரு துறையின் அறிக்கை என்பது அத்  துறையைச் சார்ந்த நிறுவனங்களுக் கும், பொது மக்களுக்கும் பயன்  உள்ளதாகவும், ஊழலற்ற தெளி வான அறிக்கையாகவும் இருக்க  வேண்டும் என்பது மரபு.  ஆனால்,  போக்குவரத்துத் துறையில் 2006  ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட் டுள்ள பல சுற்றறிக்கைகள் இத் துறை சார்ந்த தொழில்களை செய்யும் அனைவருக்கும் மிகுந்த பாதிப்பை யும், வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைமையையும் ஏற்படுத்தி உள்  ளது என்பது நிதர்சனமான உண்மை. கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற போக்குவரத்து ஆணையரின் கூட் டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தற்போதைய போக்குவரத்து ஆணை யர் ஒரு கடிதத்தை கீழ்நிலை அதி காரிகளுக்கு அனுப்பி உள்ளார்.  இதில் “குறிப்பிட்ட 2 நாட்கள் மட்  டுமே ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் வரும் மாணவர்கள் ஓட்டுநர் தேர் வுக்கு வர வேண்டும் எனவும், மீத முள்ள 3 நாட்கள் பொதுமக்கள் மட் டுமே தேர்வுக்கு வர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.    

முறையான பயிற்சி பெற்று பாது காப்பான வாகனத்தை இயக்க  வேண்டும் என்ற நோக்கத்தோடு ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவர்களும் பொதுமக் கள் தானே? பிறகு ஏன் இந்த பாகு பாடு.     பயிற்சி மேற்கொள்ளாமல் உரி மம் பெற வருபவர்கள் எங்கு பயின்  றார்கள்? எப்படி பயின்றார்கள்? அவர்  களுக்கு பயிற்சி பெறப்பட்டதன் அத்  தாட்சி/சான்று ஏதும் உண்டா? “அனைத்து ஓட்டுநர் உரிம தேர்வு களுக்கும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி கள் மூலம் முறையான பயிற்சி பெற்ற பின்னரே உரிமம் வழங்கப்பட வேண்  டும்” என எங்கள் அகில இந்திய கூட்ட மைப்பின் சார்பாக ஒன்றிய அரசுக்கு  நாங்கள் அழுத்தம் கொடுத்துக் கொண்  டிருக்கிற நேரத்தில், இத்தகைய ஒரு சுற்றறிக்கையினை வெளியிட்டு சாலைப் பாதுகாப்பிற்கும், பொது மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த சுற்றறிக்கை ஊழலை மேலும் வளர்ப்பதற்கான வழிவகை செய்வதற்காக வெளியி டப்பட்டதுபோல் உள்ளது.

அண்டை மாநிலங்களில் குறிப்  பாக, நம்மைவிட குறைந்த மக்கள்  தொகையும், குறைந்த பரப்பளவு  உள்ள மாநிலங்கள் அதன் போக்கு வரத்துத் துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வாளர்களை பணி யமர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட் டில் மட்டும் ‘கழுதை தேய்ந்து கட்  டெறும்பு ஆனது போல்’ ஒவ்வொரு அலுவலகத்திலும் 4 முதல் 5 ஆய்வா ளர்கள் இருந்த நிலை மாறி, இன்று  பல அலுவலகங்களில் ஒரே ஒரு ஆய்வாளர் இருக்கும் நிலையும், இன்னும் சில அலுவலகங்களில் நிரந்  தர பணியில் ஒரு ஆய்வாளர்கூட இல்லாத அவல நிலையும் உள்ளது என்பது மறைக்கப்பட்டு இத்தகைய ஒரு சுற்றறிக்கையின் மூலம் ‘முழு  பூசணிக்காயை சோற்றில் மறைக் கும்’ தந்திரமாக உள்ளது. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி களின் எதிர்காலத்தையும், வாழ்வா தாரத்தையும் பெருமளவு பாதிக்கிற இந்த சுற்றறிக்கையை திரும்பப்  பெற்று, முன்பிருந்த முறையிலேயே  ஓட்டுனர் பயிற்சி பள்ளி மாணவர் களுக்கு தேர்வு நடத்த ஆவன செய்யு மாறு  போக்குவரத்து ஆணையரை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.