states

பருவமழையை எதிர்கொள்ள தயார்: முதல்வர்

சென்னை, செப்.26- சென்னை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்ககூடிய மாவட்டங்க ளில் மேற்கொள்ளப்பட வேண்டிய  நடவடிக்கைகள் கண்டறிந்து அதற் கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் திங்களன்று (செப்.26) முதல் வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், “பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பது மனநிறைவை ஏற்படுத்தியிருக்கிறது.” என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், “கடந்த ஆண்டில் ஆட்சிக்கு வந்த வுடன் பெருமழையை சந்தித்தோம். சென்னை அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நமக்கு பெரும் சவாலாகவே இருந்தது. மீண்டும் அதே போன்றதொரு நிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று, அப்போதே முடிவெடுத்து அதற்குறிய நடவடிக்கைகளில் ஈடு பட்டோம். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை அமைத்து  அக்குழு அளித்துள்ள ஆலோசனை களின்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றும் அவர் கூறினார். சென்னை மட்டுமின்றி அதனை சுற்றி யுள்ள மாவட்டங்கள் மற்றும் வடகிழக் குப் பருவமழையால் பாதிக்கக்கூடிய பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை கண்ட றிந்து அதற்கான பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்பு  அதிகமாகும் இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார். சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளதையும் அறிந்து கொண்டேன். பருவமழையையொட்டி இந்த ஏரிகளை தொடர்ந்து கவனித்து அதை முறை யாக கையாள வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

;