states

இராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் அமைத்து மின் உற்பத்தி

திருநெல்வேலி, அக். 5- நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளை பகுதியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலையை  அமைத்துள்ளது. இதன் மூலம் 4.2  மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படு கிறது. இந்த காற்றாலையை ஒன்றிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் பகவந்த் கூபா புதனன்று பார்வையிட்டார். அந்த நிறுவன அதிகாரிகளிடம் காற்றாலையின் செயல்பாடு, உற்பத்திச் செலவு உள்ளிட்ட விபரங்களை அவர்  கேட்டறிந்தார். பின்னர் செய்தி யாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்திய கடலோரப் பகுதிகளில் 70 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளது. குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் 35 ஜிகாவாட் அள விற்கு காற்று வளம் உள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இரண்டு காற்றாலைகளை அமைக்க உள்ளோம். இதன் மூலம் ராமேஸ்வரம் நகர் முழு வதும் மின்சாரம் விநியோகிக்க முடியும்.  எதிர்காலத்தில் 7 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்குப் போதுமான அளவுவாய்ப்பும், வளமும் இந்தியாவில் உள்ளது. சூரிய சக்தி மூலம் 300 ஜிகாவாட் மின்சாரமும், பிற மரபு சாரா எரிசக்தி மூலம் 200 ஜிகாவாட் மின்சார மும் உற்பத்தி செய்யமுடியும் என்று அவர் தெரிவித்தார்.

;