states

உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் மசோதா: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்

சென்னை, ஏப். 22- 12 மணி நேர பணிச் சட்டம் உழைப்புச்  சுரண்டலுக்கு வழிவகுக்கும் என்றும் தமிழ்நாடு அரசு  இம்மசோதாவை  உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திராவிடர் கழகம்,   மதிமுக, பாமக,  விசிக, பாமக உள்ளிட்ட பல்வேறு  கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி யுள்ளனர். அவர்களது அறிக்கை வருமாறு  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி :  நாளொன்றுக்கு 14 மணி நேரம் உழைப்பு  என்ற ஒரு காலகட்டம் இருந்ததுண்டு. 1945 நவம்பர் 28 அன்று டாக்டர் அம்பேத் கரின் முயற்சியால் தொழிலாளர் பிரதிநிதி, ஆலை உரிமையாளர் பிரதி நிதி, அரசுப் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவில் முத்தரப்பு ஒப்பந்த  அடிப்படையில், தொழிலாளர் பணி  நேரம் 8 மணிநேரமாகக் குறைக்கப் பட்டது என்பது வரலாறு. இப்பொழுது நாம் பின்னோக்கிப் பயணிக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. எனவே, இந்த  அவப்பெயரைத் தவிர்க்க முதல மைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

திரும்பப் பெறுக 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: உலகத் தொழிலாளர்கள் 8 மணி  நேர வேலை உரிமைப் போராட்டத்தை  தொடங்கிய மே நாள் நெருங்கிய நேரத் தில், அவர்களது உரிமை மறுக்கப்படுவ தும், மே தின நினைவு சின்னம் அமைத்த   கலைஞர் வழி நடக்கும் திமுக ஆட்சி யில், தமிழ்நாட்டில் மேதினம் கொண்டாடிய வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டை அரசே கொண்டாட வேண்டிய நேரத்தில், அந்நிய நாட்டு  முதலீட்டை காரணம் காட்டி தொழி லாளர் வேலை நேரத்தை அதிகரிப்பது  எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. எனவே, பேரவையில் நிறைவேற்றிய தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை ஆளுநரில் ஒப்புதலுக்கு அனுப்பா மல் நிறுத்தி வைத்து, அதனைத் திரும்பப் பெற வேண்டும்.

உழைப்பு சுரண்டலுக்கு வழிவகுக்கும்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தற்போது 8 மணி நேரம் வேலை என்ற சட்டம் நடைமுறையில் இருக்கும்போதே உற்பத்தித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை களின் பணியாளர்கள் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும்  பணிச் சூழல்தான் இருக்கிறது. தொழிலாளர்கள் மிகை வேலை மூலம் ஈட்டும் ஊதியமும் இச்சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுவிடும், வேலையின்மை பெரும் ஆபத்தும் இருக்கிறது. தொழி லாளர் வர்க்கத்தை தொழில் நிறுவ னங்களின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கவும் கூடாது. பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்  பிரதேசம், குஜராத், மத்தியப்பிர தேசம் போன்ற மாநிலங்கள் தொழிலா ளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டம் இயற்றி உள்ளன. அதே நிலை தமிழ்நாட்டில் உருவாவதை தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட திமுக அரசு அனு மதிக்காது என்ற நம்பிக்கை இருக்கி றது.

தொழிலாளர்கள் உரிமையை பறிப்பதா?

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: 1991 ஆம் ஆண்டில் புதிய  பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே, பன்னாட்டு நிறுவனங்களின் வணிக நலன்களுக்காகவும், அவற்றின் உற்பத்தியையும், லாபத்தையும் பெருக்குவதற்காகவும் தொழிலாளர்க ளின் நலன்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன; அவர்களின் உழைப்பு அவர்களுக்கே தெரியாமல் சுரண்டப் பட்டு வருகிறது. இந்த நிலையில், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் எந்த சட்டமும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது. இதை உணர்ந்து 12  மணி நேர பணிச் சட்டத்தை உடனடியாக  திரும்பப் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம்: லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பன்னாட்டு முதலாளிகளுக்காக, தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்க ளின் உரிமைகளைப் பறிப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே, தொழிலா ளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.