states

மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உறுப்புகள் தானம்

வேலூர்,செப்.29- வேலூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த 13 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கி யுள்ளனர். வேலூர் மாவட்டம் ஒடுக்கத் தூரை அடுத்த சின்னம்பள்ளி குப்பத்தை சேர்ந்த தையல் தொழி லாளி சதீஷ் - நந்தினி தம்பதியின் இளைய மகன் துர்கபிரசாந்த் (13).   இம் மாதம் 25 ஆம் தேதி கோவி லுக்கு சென்று மிதிவண்டியில் வீடு திரும்பும் போது அடையாளம் தெரி யாத இருசக்கர வாகனம் மோதிய தாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காய மடைந்த சிறுவன் துர்காபிரசாத்தை மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  நிலையில், மூளைச்சாவு அடைந் தார். இதனையடுத்து அவரது பெற்றோரின் அனுமதியோடு சிறு வனின் கல்லீரல், ஒரு சிறுநீரகம்  சென்னை எம்.ஜிஎம் மருத்து வமனைக்கும், மற்றொரு சிறுநீரகம்  சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனைக்கும் தானமாக வழங்கப் பட்டுள்ளது.

;