யுஜிசி அமைத்த புதிய குழு
சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் வழங்குவதில் விதி மீறல்களை கண்டறிய ஒரு புதிய குழுவை பல்கலைக்கழக மானியக் குழு ( யுஜிசி) அமைத் துள்ளது. யுஜிசியின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது, சில நிறு வனங்களைத் தேர்ந்தெடுத்து, ஆசிரியர் நியமனங்கள் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் வழங்குவது தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும். மேலும் ஆவ ணங்களைச் சரிபார்த்து, தகுந்த பரிந்துரைகளையும் வழங்கும். விதிமீறல்கள் ஏற்பட்டால் அதற் கான தகுந்த நடவடிக்கைகளை யும் பரிந்துரை செய்யும்.
சரத் பவாருடன் சந்திப்பு
புதுதில்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித் துள்ளார். தில்லி அரசின் நட வடிக்கைகளுக்கு தேசியவாத காங்கிரஸ் தனது ஆதரவை வழங்கும் என்று கெஜ்ரிவாலி டம் பவார் உறுதியளித்தார்.
வாடிக்கையாளர் அதிகரிப்பு
புதுதில்லி: இந்திய தொலை தொடர்பு வாடிக்கையா ளர்களின் எண்ணிக்கை குறித்து தொலைத்தொடர்பு துறை ஒழுங்காற்று அமைப் பான டிராய் புள்ளி விவரங்கள் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த மார்ச் மாதத்தில் இந்தி யாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலை யன்ஸ் ஜியோ கூடுதலாக 30.5 லட்சம் மொபைல் சந்தா தாரர்களை சேர்த்தது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் சந்தா தாரர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 43 கோடியை கடந்தது. பாரதி ஏர்டெல் நிறுவனம் 10.37 லட்சம் மொபைல் சந்தா தாரர்களை கூடுதலாக சேர்த் தது. இதனால் அதன் சந்தா தாரர்களின் எண்ணிக்கை 37.09 கோடியாக உயா்ந்தது. கடந்த மார்ச்சில் ஒட்டுமொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை முந்தைய பிப்ரவரி மாதத்தைவிட 0.86 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு சந்தா தாரர்களின் எண்ணிக்கை 117.2 கோடியாக அதிகரித்தது. இது, முந்தைய பிப்ரவரி மாதத் தைவிட 0.21 சதவீதம் உயர்வா கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அகந்தையால் கட்டப்பட்டதல்ல’
புதுதில்லி: புதிய நாடாளு மன்ற கட்டிடம் மே 28 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கு ஜனாதிபதியை அழைக்க வில்லை. இதனைக் கண்டித்து காங்கிரஸ், திமுக ,சிபிஎம்,சிபிஐ உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, விழாவில் பங்கேற்க போவதில்லை என்று புறக்கணித்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் , நாடாளுமன்ற கட்டி டத்தை ஜனாதிபதியை கொண்டு திறக்கவும் இல்லை. விழாவுக்கு அவரை அழைக்கவும் இல்லை. இது நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு அவமதிப்பாகும். நாடாளுமன்றம் அகந்தை யால் (‘ஈகோ’) கட்டப்பட்டதல்ல. அது, அரசியல் சாசனத்தின் மதிப்பினால் கட்டப்பட்டதாகும் என்று தெரிவித்துள்ளார்.
மே 28 கருப்பு நாள்: விசிக
சென்னை: புதிய நாடாளு மன்ற கட்டட திறப்பு விழா நடை பெறும் மே 28 ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க திட்டமிட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு சட்டையை அணிந்து துக்க தினமாக அனுசரிப்பதாகவும் தெரிவித்தார்.
பழங்குடியினத்தில் பிறப்பது பாதகம் கிடையாது: ஜனாதிபதி
ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் சார்பில் ஜார்கண்டில் நடந்த நிகழ்ச்சியில் குடி யரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேசுகையில், பழங்குடியினத்தில் பிறப்பதும் அல்லது பெண்ணாய் பிறப்பதும் பாதகமான விஷயம் கிடையாது. பழங்குடி சமூகம் பல துறைகளில் சிறந்த முன் மாதிரிகளாக திகழ்கிறது. பழங்குடி சமூகத்தில் வரதட்சணை முறை கிடையாது. தங்களின் திறமை, ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். பெண்களின் உரிமைகள், நலனுக்காக அரசு நடத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.
‘பாஜகவுக்கு எதிராக அனைவரையும் ஒருங்கிணைப்போம்’
“நாட்டில் ஒரு வித நெருக்கடி உள்ளது, இது தில்லிக்கு மட்டுமேயான பிரச்சனை அல்ல. என்சிபி மற்றும் மகாராஷ்டிர மக்கள் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிப்பார்கள். கெஜ்ரி வாலுக்கு ஆதரவாக மற்ற தலைவர்களிடமும் பேசுவோம். பாஜக அல்லாத அனைத்து கட்சிகளை யும் ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்துவோம்” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
தில்லி முன்னாள் அமைச்சர் ஐசியு-வுக்கு மாற்றம்!
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், தில்லி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஓராண்டாக திகார் சிறை யில் இருக்கும் அவருக்கு நீதிமன்றம் இதுவரை ஜாமீன் வழங்கவில்லை. இந்நிலையில், சத்யேந்திர ஜெயின் தில்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். சிறையில் குளியலறைக்குச் சென்றபோது சத்யேந்திர ஜெயின், எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து காயமடைந்ததாகவும், அதனாலேயே அவர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ள மருத்துவர்கள், தற்போது சத்யேந்திர ஜெயினை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சேர்த்து மருத்துவ சிகிச்சைகள் அளித்து வருகின்றனர்.
மோடி மீது ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் விமர்சனம்
காங்கிரஸ் மக்களவைக்குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “இந்திய மக்கள் மோடி மீது விரக்தியில் உள்ளனர். மோடி ஒரு பைத்தியக்கார பிரதமர் என்று மக்கள் சொல்கிறார்கள். இப்போது மக்கள் மோடிக்கு எதிராக இருப்ப தால், ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள், அதற்கேற்ப நடந்து கொள்ள முயற்சிக்கின்றன. ஆனால், இரு கட்சிகளும் காங்கிரசை அழிப்பதன் மூலம் முன்னேற நினைக்கின்றன. காங்கிரஸை அழிப்பது மட்டுமே அவர்களின் நோக்கம் என்று கூறியிருந்தார். இதில், பிரதமர் மோடியை பைத்தியக்கார பிரதமர் என்றதற்கு எதிர்ப்பு கிளப்பிய நிலையில், 2000 ரூபாய் நோட்டு விவகாரத்தில், பொதுமக்களின் உணர்வுகளையே வெளிப்படுத்தினேன். அவர் களின் எதிர்வினை எப்படியிருக்கிறது என்றே கூறியிருந்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
‘உச்சநீதிமன்றம் மீது மோடி அரசுக்கு நம்பிக்கையில்லை’
குரூப்-ஏ அதிகாரிகளை நியமிக்க தில்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதற்கு மாறாக, அதிகாரத்தை மீண்டும் ஒன்றிய அரசின் வசமே கொண்டுவர மோடி அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. இதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக, தில்லி முதல்வர் கெஜ்ரிவால் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்த அவர், தேசியவாத காங்கிரஸ் தலை வர் சரத் பவார், சிவனோ (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரையும் சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உச்சநீதிமன்றம் மீது மோடி அரசுக்கு நம்பிக்கையில்லை என்பதையே அவசரச் சட்டம் காட்டுகிறது” என்று விமர்சித்துள்ளார்.
‘காவல்துறை காவிமயமாக அனுமதிக்கமாட்டோம்’
கர்நாடக முதல்வர் சித்தராமையா முன்னிலையில், அம்மாநில காவல்துறை உயரதி காரிகளின் மாநாடு நடைபெற்றது. இதில், துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது “கடந்த பாஜக ஆட்சியின் போது, மங்களூரு, பீஜாப்பூர், பாகல்கோட் ஆகிய இடங்களில் காவி உடை உடுத்தியவர்களுடன் சேர்ந்து நீங்கள் (காவல்துறை யினர்) என்ன செய்தீர்கள் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இனி காவல்துறை யை காவி மயப்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மூவர்ண சுதந்திர கொடியின் கீழ் நிற்ப வர்களுக்கு மட்டுமே இனி இங்கு வேலை” என்று கூறியுள்ளார்.
சித்தராமையாவை தீர்த்துக்கட்ட சொன்ன பாஜக எம்எல்ஏ கைது!
“திப்பு சுல்தான் வேண்டுமா அல்லது சாவர்க்கர் வேண்டுமா? என்பதை மாண்டியா மக்கள் முடிவு செய்ய வேண்டும். திப்பு சுல்தான் வேண்டாம் என்று அனுப்பியது போல் சித்தராமையா வையும் நீங்கள் அனுப்ப வேண்டும். திப்பு சுல்தானை நஞ்சேகவுடா, ஊரிகவுடா பினிஷ் செய்தது போல் சித்தராமையாவையும் பினிஷ் ஆப் செய்ய வேண்டும்’’ என்று தேர்தலின்போது கர்நாடக பாஜக அமைச்சர் அஸ்வந்த் நாராயணன் பேசியிருந்தார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும் அஸ்வந்த் நாராயணன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தற்போது காங்கி ரஸ் ஆட்சியமைந்துள்ள நிலையில், கொலை மிரட்டல், மதக்கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அஸ்வந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உதவியாளர்கள் வீட்டில் ரெய்டு
ஆம் ஆத்மி கட்சியை குறிவைத்துள்ள ஒன்றிய பாஜக அரசு, பணப்பரிவர்த்தனை வழக்கில் அக்கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சராக இருந்தவருமான சத்யேந்திர ஜெயினை யும், மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டில், தில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவை யும், சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புக்கள் கைது செய்தன. இந்நிலையில், மதுபான ஊழல் விவகாரத்தில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கும் தொடர்பு இருப்பதாக கூறி, சஞ்சய் சிங்கின் நெருங்கிய உதவியாளர்களின் வீடுகளில் புதனன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.
ஒடிசா மாநில சிவன் கோவில்களில் கஞ்சா பயன்பாட்டிற்கு தடை?
ஒடிசா மாநிலம், ஆரடி அருகே உள்ள பாபா அகண்டல்மணி சிவன் கோவிலில் கஞ்சா பயன் பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என அனந்த பலியா அறக்கட்டளையின் தலைவரான பலியா பாபா, கடந்த ஏப்ரல் 13 அன்று, ஒடிசா மாநில கலால் துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். “சிவபெரு மானின் பெயரில் கஞ்சாவை அதிகமாகப் பயன்படுத்துவது மத உணர்வை மாசுபடுத்துகிறது. சிவன் கஞ்சா பயன்படுத்துவதில்லை. கஞ்சாவிற்குப் பதிலாக பல நல்ல பொருட்களை இறைவனுக்குப் படைக்கலாம்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஒடிசா முழுவதும் சிவன் கோவில்களில் கஞ்சா பயன்பாட்டிற்கு தடை விதிக்க அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.