states

img

மதுரை விமான நிலையத்திற்கு சிஐஎஸ்எப் படை வீரர்களை அதிகரிக்க உத்தேசம் இல்லை

புதுதில்லி, டிச.15-    மதுரை விமான நிலையத் திற்கு சி.ஐ.எஸ்.எப். படை வீரர்  களை கூடுதலாக நியமிக்க வேண்  டும் என்று  நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். இதற்கு, படைவீரர்களை அதிகரிக்க உத்  தேசம் இல்லை என்று தெரிவித்த  ஒன்றிய சிவில் விமானப் போக்கு வரத்து இணை அமைச்சர், தலை கீழாக பதிலளித்துள்ளார்.  இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: மதுரை விமான நிலையத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி  வரை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை போதா மையால் கூடுதல் விமானங்களை இயக்க முடியவில்லை. இத னால் வெளி நாடுகளுக்கான விமா னங்கள் மதுரைக்கு வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இங்கு வர  வேண்டிய வாய்ப்புகள் வேறு விமான  நிலையங்களுக்கு சென்று விடு கின்றன. ஆகவே சி.ஐ.எஸ்.எப்.  படை வீரர்கள் கூடுதலாக மூன் றாவது பணி நேரத்திற்கு நியமனம்  செய்யப்பட வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கையை நானும், தென் மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள், மதுரை தொழில் வர்த்தக சபையினரும் முன்வைத்து வருகிறோம். மது ரையை சர்வதேச விமான நிலை யமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலி யுறுத்தி வருகிறோம்.  இது குறித்து நான் நாடாளு மன்றத்தில் கேள்வி (எண் 1499/ 15.12.2022) எழுப்பியிருந்தேன்.

அமைச்சர் பதில் 

இதற்கு ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் வி. கே.சிங் அளித்த பதில், “இப்போதைக்கு இந்திய தொழில் பாதுகாப்புப் படை எண்  ணிக்கையை அதிகரிக்கும் உத்  தேசம் இல்லை. மொத்த பணி யிடங்கள் 268, அவற்றில் நிரப்பப் பட்டு இருப்பது 263. விமானங்கள் காலை 7.15 மணியிலிருந்து இரவு  8 மணி வரைதான் இயக்கப்படு கின்றன. கூடுதல் விமானங்கள் இந்த நேரத்தை கடந்து இயக்கப் பட்டால் கூடுதல் தொழில் பாது காப்புப் படை வழங்கப்படும்” என்று  தெரிவித்துள்ளார். 

ஏமாற்றம் 

அமைச்சரின் பதில் தலை கீழாக இருக்கிறது. இரவு விமா னங்கள் இல்லையே என்றால்  இந்திய தொழில் பாதுகாப்புப் படை போதவில்லை என்பதும், தொழில் பாதுகாப்புப் படையை கூடுதலாக கேட்டால் கூடுதல் விமா னங்கள் வந்தால் தருகிறோம் என்ப தும் போகாத ஊருக்கு வழி சொல்  வது போல இருக்கிறது. மத்திய, தென் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களுக்கு பயன்  அளித்து வரும் மதுரை விமான நிலையம் சம்பந்தப்பட்ட இக்  கோரிக்கை இப்படி தொடர்ந்து புறம் தள்ளப்படுகிறது. இக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மதுரை ,தூத்துக்குடி தொழில்  வளப் பாதையும் வலுப்பெறும். தமி ழகத்திற்கு ஒன்றிய அரசு காட்டும் பாரபட்சத்தின் நீட்சியாகவே இந்த கோரிக்கையை ஏற்க மறுப்ப தும் உள்ளது. ஆனால் மதுரை வளர்ச்சிக்கான எங்கள் குரல் ஓயாமல் ஒலிக்கும். மதுரை மக்க ளின் கருத்தையும் திரட்டி ஒன்றிய  அரசை நிச்சயம் ஏற்க வைப்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.