states

தமிழகம் முழுவதும் கல்குவாரி கிரசர், லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 26 - தமிழ்நாடு கல்குவாரி கிரசர் மற்றும் லாரி உரிமை யாளர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு திங்களன்று திருச்சி பிரஸ் கிளப்பில் நடந்தது. இதில் மாநிலத் தலைவர் சின்னசாமி, பொதுச் செய லாளர் ஜெயராமன், செயலாளர் முத்துகோவிந்தன் ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  சட்டத்திற்கு உட்பட்டு முறையான அனுமதி பெற்றுக் கொண்டு கல்குவாரி நடத்தி வருகிறோம். ஆனால் எங்களை சட்டவிரோத தொழில் செய்பவர்கள் போல் தொடர்ந்து சித்தரிப்பது மிகவும் வேதனையளிக்கிறது.  எனவே அரசு அதிகாரிகளின் அத்துமீறிய அச்சு றுத்தல் செயல்களை நிறுத்த வேண்டும். சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் கல்குவாரி மற்றும் கிரசர்  உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் நடவ டிக்கையை தடுத்து, அவர்களை தண்டிக்க வேண்டும். மேஜர் மினரல்களுக்கு உண்டான சட்டத் திட்டங்களை, மைனர் மினரல்களாகிய கல், ஜல்லி உடைக்கும் சிறு தொழில் களுக்கு அமல்படுத்தியதை திரும்பப் பெற வேண்டும். சாதாரண கருங்கல் குவாரிகள் மூலம் பயன்பெறும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், அரசு நிர்வாகம் மைனிங் பிளான் என்ற திட்டத்தை, மைனர் மினரல்களுக்கு அமல்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூன் 26) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளோம். தமிழகத்தில் உள்ள 2 ஆயிரம் கல்குவாரிகள், 5 ஆயிரம் கிரசர் மற்றும் டிப்பர் லாரிகள் இந்த வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளன.  இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது மாநிலப் பொருளாளர் பாலசுப்ரமணி யன், துணைத் தலைவர்கள் செல்வசுந்தரம், சிவசாமி, இணைச் செயலாளர்கள் நந்தகுமார், யோகநாதன் ஆகி யோர் உடனிருந்தனர்.