states

36 கல்லூரிகளில் எஸ்எப்ஐ வெற்றி

திருவனந்தபுரம், அக். 20 - ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கேரள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் வியாழனன்று (அக்.19) நடைபெற்ற மாணவர் பேர வைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் (SFI) வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது. அமைப்பு ரீதியாக தேர்தல் நடந்த 38 கல்லூரிகளில் 36 கல்லூரிகளின் மாணவர் பேரவைகளை இந்திய மாணவர் சங்கம் கைப்பற்றியுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் ஒன்று க்கு ஒன்று, கண்ணூர் ஐந்துக்கு ஐந்து, கோழிக்கோடு மாவட்டத்தில் மூன்றில் இரண்டு, வயநாட்டில் ஒன்றுக்கு ஒன்று, பாலக்காட்டில் இரண்டுக்கு இரண்டு, திருச்சூரில் மூன்றுக்கு மூன்று, எர்ணாகுளத்தில் இரண்டுக்கு இரண்டு, இடுக்கி, கோட்டயம், பத்த னம் திட்டா, ஆழப்புழாவில் மூன்றுக்கு  மூன்று, கொல்லத்தில் ஐந்துக்கு மூன்று, திருவனந்தபுரத்தில் மூன்று க்கு மூன்று - என மேற்கண்ட மாவட்டங் களில் இருக்கும் 36 கல்லூரிகளை இந்திய மாணவர் சங்கம் தன்வசமாக்கி யுள்ளது. இவற்றில் பாலக்காடு அரசு பொறியியல் கல்லூரி, திருவனந்த புரம் சிஇடி, வயநாடு மானந்தவாடி அரசு பொறியியல் கல்லூரி ஆகிய வற்றை எஸ்.எப்.ஐ  மீண்டும் கைப்பற்றி யுள்ளது.  எஸ்எப்ஐ வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்து மாணவர் களுக்கும், அவர்களின் வெற்றிக்காக இரவு - பகலாக உழைத்த ஊழியர் களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சங்க மாநிலத் தலைவர் கே. அனுஸ்ரீ, செயலாளர் பி.எம். ஆர்ஷோ ஆகியோர் தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.