states

தமிழக முதலமைச்ருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை விதி எண் 123-இன் கீழ் “கௌரவம் மற்றும் மரபு என்ற பெயரில் நிர்ப்பந்தம், கொலை மற்றும் குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா 2015” முன்வடிவு என்ற பெயரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் அப்போதைய சட்டமன்றக் குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் 29.9.2015 அன்று பேரவைச் செயலகத்தில் சமர்பித்ததையும் அன்றைய அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

தொடர்ந்து விமலாதேவியின் இணை யர் திலீப்குமார் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு எண் 26991 / 2014 என்ற வழக்கில் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன், 13.04.2016 அன்று வழங்கியுள்ள தீர்ப்பு  “சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்று அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது. அத்தகைய தனிச் சட்டம் இயற்றப்படுகிறவரை சாதி மறுப்புத்  திருமண தம்பதிகளைப் பாது காப்பதற்கு சிறந்த வழிகாட்டுதல் களையும் உத்தரவாக வழங்கி யிருக்கிறது. சாதி மறுப்புத் தம்பதியரைப்  பாதுகாக்க 9 வழிகாட்டுதல்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரின் புகார்கள்  மீது நடவடிக்கைகள் எடுத்திட தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும். மாவட்டக் காவல் கண் காணிப்பாளர், மாவட்ட சமூக நலத் துறை அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிட நல அதிகாரி ஆகியோர் சிறப்புப் பிரி வின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். புகார்களை நேரிலோ, தொலைபேசியிலோ பெறுவதில் துவங்கி, தற்காலிக தங்குமிடத்தில் தங்கவைத்து பாதுகாப்பு வழங்குவது வரை இந்தச் சிறப்புப் பிரிவு பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக, 24 மணிநேரமும் செயல்படக்கூடிய ஒரு தொலைபேசி எண்ணையும் உருவாக்க வேண்டும் என்பது உள்பட சாதி மறுப்பு இணையரின் பாது காப்பிற்கு ஒன்பது வழிகாட்டல் களையும் வழங்கி இருக்கிறது. மேற்கண்ட முக்கியத்துவம்  வாய்ந்த வழிகாட்டல்படி சிறப்பு பிரிவுகளை அன்றைய தமிழ்நாடு அரசு ஏற்படுத்தவில்லை. 

நீதி மன்றங்களை  ஏமாற்றிய அதிமுக அரசு

இந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் (வழக்கு எண் 460/2017) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அர சின் அன்றைய உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப் பூர்வமான வாக்குமூலத்தில் “தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், மாநகரங்களிலும் ரிட் மனு 26991/2014ன் படி சிறப்பு பிரிவுகள் தற்பொழுது அமைக்கப்பட்டுவிட்டது” என்றதுடன், சிறப்பு பிரிவுகளின் அதி காரிகள் பெயர் மற்றும் தொலைபேசி எண்களையும் தெரிவித்திருந்தார்.  ஆனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக அன்றைய அரசால் பெய ரளவிற்கே இப்பிரிவுகள் அமைக்கப் பட்டன. இச்சிறப்பு பிரிவுகள் செயல் பாட்டிற்கு வரவில்லை. எனவே, தனிச்சிறப்பு சட்டம் இயற்றப்படுகிற வரை நீதிமன்ற உத்தரவின்படி இச்சிறப்பு பிரிவுகள் செயல்படுத்தப்பட வேண்டும். சிபிஎம் கொண்டு வந்த மசோதாவையும் ஏற்கவில்லை அதே போல், தமிழ்நாடு அரசு சட்டப் பேரவை விதி எண் 123-இன் கீழ் “கௌர வம் மற்றும் மரபு என்ற பெயரில் நிர்ப்பந்தம், கொலை மற்றும் குற்றங் கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா 2015” முன்வடிவு என்ற பெயரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் அப்போதைய சட்டமன்றக் குழுத் தலைவர் அ. சவுந்தரராசன் 29.9.2015 அன்று பேரவைச் செயலகத்தில் சமர்பித்ததையும் அன்றைய அரசு கிடப்பில் போட்டுவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு முத லமைச்சர் மேற்கண்டவைகளை பரிசீல னை செய்து சாதி ஆணவப் படுகொலை களையும், இது தொடர்பான  குற்றங் களையும் தடுப்பதற்கு சாதி ஆண வப்படுகொலைகளுக்கு எதிரான தனிச்சிறப்பு சட்டம் நடப்பு கூட்டத் தொடரிலேயே இயற்றிட நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.