states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. ஐஐடி, இந்திய அறிவியல் கழகம், எய்ம்ஸ் ஆகிய புகழ்பெற்ற கல்வி நிறு வனங்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் முழு கல்வி செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்கும் என அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழ் நாடு அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  2. வாட்ஸ் அப், கூகுள் மீட் போன்ற இணைய அழைப்பு செயலிகளை ஒழுங்குபடுத்துவதற் கான நடவடிக்கையை மேற்கொள்ள தொலை தொடர்பு ஆணைத்திடம் (டிராய்) ஒன்றிய அரசு கருத்து கேட்டுள்ளது.
  3. தமிழ்நாட்டின் 18 மாவட் டங்களில் இயல்பைவிட 100 சதவிகிதத்திற்கு அதி கமாக மழை பெய்துள் ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இயல்பை விட 93% அதிகமாக மழை பெய்துள்ள நிலையில், இந்த மழை அளவு கடந்த 122 ஆண்டுகளில் 3வது அதிகபட்ச அளவா கும் என சென்னை வானி லை ஆய்வு மையம் தகவல்.
  4. திடீர் கனமழையால் பாகிஸ்தானில் 100 கிமீ தூரத்திற்கு புதிய ஏரி ஒன்று உருவாகியுள்ளது. கனமழைக்கு முன்பு விளைநிலங்களாக இருந்த பகுதிகள் தற் போது நாட்டின் மிகப் பெரிய ஏரியாக மாறி யுள்ளதாக அமெரிக்கா வின் நாசா விண்வெளி  ஆராய்ச்சி மையத்தின்  மோடிஸ் செயற்கைக் கோள் புகைப்படம் வெளி யிட்டுள்ளது. 
  5. ஆப்கானிஸ்தான் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் அனைத்தையும் அமெரிக்கா திருப்பித் தர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யப் பிரதிநிதி வாசிலி நெபென்சியா வலியுறுத்தியுள்ளார். போரால் சின்னாபின்னமாகியுள்ள ஆப்கானிஸ்தானின் மறு கட்டுமானத்திற்கு மற்ற நாடுகளிடம் இருந்து நிதியைக் கேட்பதற்குப் பதிலாக, அந்த நாட்டு மக்களுக்குச் சொந்தமான பணத்தை அமெரிக்கா கொடுத்தாலே போதும் என்று நெபென்சியா குறிப்பிட்டுள்ளார்.
  6. 2019-ஆம் ஆண்டில் பிரேசிலில் நடைபெற்ற போராட்டத்தை தற்போதைய சிலியின் ஜனாதிபதி காப்ரியல் போரிக் தூண்டி விட்டதாக பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானாரோ கூறியிருந்தார். இது குறித்த அதிகாரப்பூர்வமான கருத்தைத் தெரிவிக்குமாறு சிலி நாட்டுக்கான பிரேசில் தூதுவரிடம் கேட்டுள்ளனர். மேலும் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சிலியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியா உர்ரேஜோலா, “போரிக் மற்றும் போல்சானாரோ ஆகிய இருவரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். அதற்குரிய மரியாதை அவசியம்” என்று குறிப்பிட்டார்.
  7. சமூக வலைத்தளங்களில் தனது கருத்தைப் பதிவிட்டதற்காக சவூதி அரேபியாவைச் சேர்ந்த சயீத் அல் கத்தானி என்ற பெண்ணுக்கு 45 ஆண்டுகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் அமைதியைக் குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இத்தகவலை படுகொலை செய்யப்பட்ட ஜமால் கஷ்ஷோகியால் உருவாக்கப்பட்ட மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ளது.