states

இலங்கையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவித்திட உரிய நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை,நவ.12- இலங்கையால் கைது செய்யப்பட்ட  அனைத்து மீனவர்களையும் உடனே விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர் களையும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர் களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.   அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடி யாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு நவம்பர் 12 அன்று கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் எழுதிய கடிதம் வருமாறு:  “இலங்கை அதிகாரிகளால் இந்திய மீன வர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதோடு, அவர் களது குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்துகிறது. நவம்பர் 9 ஆம் தேதி அன்று இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 2 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நவம்பர் 12 ஆம் தேதி அன்று, நாகப் பட்டினத்திலிருந்து மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த 12 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024 ஆம் ஆண்டில் தான் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக தூதரக நடவடிக்கைகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.