“அங்கன்வாடி பணியாளர் (AWW) மருத்துவ உதவி யாளர், ஆலோசகர், ஒருங் கிணைப்பாளர், பொதுமக்கள் தொடர்பு மேலாளர், நிகழ்வு மேலாளர், எழுத்தர், பள்ளி முன் ஆசிரியர் என பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. அங்கன்வாடி பணி யாளர்கள் மற்றும் உதவியாளர்களின் கடின மான பொறுப்புகளை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, பொது வேலைவாய்ப்பில் தெளி வான பாகுபாடு காணப்படுகிறது” என குஜராத் உயர்நீதிமன்றம் தனது சமீபத்திய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. ஒன்றிய மற்றும் குஜராத் மாநில அரசுகள் இணைந்து ஆறு மாதங்களுக்குள் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை முறையே மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு ஊழியர்களாக பணி நிரந்தரம் செய்வதற்கான கொள்கையை உருவாக்க நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அரசு கொள்கையை இறுதி செய்யும் வரை, மனுதாரர்களுக்கு மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு அரசு ஊழியர்களுக்கு நிகரான குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தினமும் ஏழு மணி நேரம் பணிபுரியும் அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் களுக்கு தினக்கூலி தொழிலாளர்களைவிட குறைவான ஊதியம் வழங்கப்படுவது பாகு பாடாகும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசுக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் இடையிலான உறவு முதலாளி-பணியாளர் உறவே என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
தொடர் போராட்டங்களின் விளைவு
தொழிற்சங்க இயக்கத்தின் பல்வேறு போராட்டங்களின் விளைவாக இந்த முக்கிய மான தீர்ப்பு கிடைத்துள்ளது. ஏப்ரல் 2022இல் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவி யாளர்களுக்கு பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் பணிக்கொடை உரிமை உண்டு என உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் பொருள் மற்றும் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில், ஐசிடிஎஸ் பொன்விழா கொண்டாட்டத் தின் ஒரு பகுதியாக, “குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் சட்ட உரிமை கள்” என்ற தலைப்பில் அகில இந்திய அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கூட்டமைப்பு (AIFAWH) டிசம்பர் 7, 2024 அன்று ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.
அரசு தோல்வியடைந்த இடத்தில்...
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி கருத்தரங்கை தொடங்கி வைத் தார். இவர்தான் ஏப்ரல் 2022 தீர்ப்பை வழங்கி யவர். “இந்தியா என்ற நாடு தனது குடிமக்க ளின் அடிப்படை உணவு, கல்வி மற்றும் சுகா தார உரிமைகளை உறுதி செய்வதில் தோல்வி யடைந்துள்ளது; ஐசிடிஎஸ் 50 ஆண்டுகள் கடந்த பிறகும், திட்டம் மக்களின் தேவைகள், கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை” என்றார் அவர். அரசு தோல்வியடைந்த இடத்தில் அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்று நீதிபதி ரஸ்தோகி சுட்டிக்காட்டினார். மிக முக்கியமான சேவைகளை வழங்குபவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையே தனது தீர்ப்பை எழுதத் தூண்டியது என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
இரண்டு இந்தியாக்கள்...
இந்தியாவில் இரண்டு வகையான பிரிவுகள் - ஒன்று “ஜொலிக்கும்” இந்தியா, மற்றொன்று “வறுமையில் வாடும்” இந்தியா - இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் வளர்ச்சிக் கண் ணோட்டத்தில் பின்தங்கிய பிரிவினரை முன்னுரி மைப்படுத்த வேண்டும் என்றார். ஐசிடிஎஸ்-ஐ நிறு வனமயமாக்க வேண்டும் என்றும், அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் உரிமைகளை அரசு அங்கீகரித்து, உச்சநீதி மன்றத்தின் உத்தரவை எழுத்திலும் உணர்வி லும் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி னார். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவி யாளர்கள் தங்கள் கடமைகளின் செயல்பாட்டை விமர்சன ரீதியாக மதிப்பிட வேண்டும் என்றும், அங்கன்வாடி மையங்களில் சேவைகளை மேம்படுத்துவதற்கான குறிப்பிட்ட பரிந்துரை களை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ரஸ்தோகி கேட்டுக்கொண்டார். பீப்பிள்ஸ் டெமாக்ரசி - டிச.15 இதழில் இருந்து