states

மயிலாடுதுறையை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவித்திடுக!

சென்னை, நவ.14- கடும் மழையால் பேரழிவுக்குள்ளான மயி லாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமி ழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த 10 தினங்களாக வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரு கிறது. தொடர் மழையின் காரணமாக தமிழ கத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், பெரம்பலூர், திருவள்ளூர், கன்னியாகுமரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் பல்லா யிரக்கணக்கான ஏக்கரில் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான கால்  நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்க ணக்கான வீடுகள் மழை நீரால் சூழப்பட்டுள் ளன.  குறிப்பாக கடந்த 10 ஆம் தேதி 122 ஆண்டு களாக இல்லாத அளவிற்கு சீர்காழி தாலுகா வில் 44 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்த தால், மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும்  90 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி யுள்ளன. 20,000 மேற்பட்ட குடியிருப்புகள் மழை  நீரால் சூழப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கால்நடைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளன. மாவட்டத்தில் நான்கு வழிச் சாலை,  புறவழிச் சாலை போன்ற சாலை பணிகளால்  வடிகால் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்பட்ட தாலும், தூர்வாரும் பணி முழுமையாக நடை பெறாததாலும் மயிலாடுதுறை மாவட்டம் மிகப்  பெரிய பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது.

ஆகவே மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும், மழை யால் இறந்து போன கால்நடைகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.  மேலும் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட் டுள்ள நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.35,000ம், கரும்பு, வாழை, தோட்டக்கலை பயிர்கள்  மற்றும் இதர பயிர்களுக்கு பாதிப்புக்கேற்ற வாறு கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மாநில அரசு, இழப்பீட்டை கணக்கெடுக்கும் பணியை காலதாமதம் செய்யாமல் விரைவாக தொடங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் உரிய நிவாரணத்தை வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கி றோம். தேவையான நிதியை ஒன்றிய அரசிடம் இருந்து விரைந்து பெற்றிட வேண்டும். வழங்  கும் இழப்பீட்டு தொகையின் அளவை உயர்த் திட வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து  தவிக்கும் விவசாய தொழிலாளர் குடும்பங்க ளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தீர்மானிக்கப்பட்டுள்ள இழப்பீட்டு தொகை யின் அளவை உயர்த்த வேண்டும்.