states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது வேட்புமனுவை  புதன்கிழமை தாக்கல் செய்தார்.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு 99% நிறைவடைந்து விட்டதாக சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தகவல் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சி தாவியவர்களுக்கும் முன்னாள் தலைவர்களின் வாரிசுகளுக்கும் பாஜக பெரும் அளவில் வாய்ப்பு வழங்கி உள்ளதால் அம்மாநில பாஜகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 

ஹோட்டல் உரிமையாளர் ஜெயா கொலை வழக்கில் பிரபல மாபியா கும்பல் தலைவரான சோட்டா ராஜனை ஜாமீனில் விடுதலை செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலக பயன்பாட்டு ஆல்கஹால் தொடர் பான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மத்திய கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்ட டானா புயல் 15.கி.மீ.வேகத்தில் மிக மெதுவாக நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு புரளியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. டுவிட்டர் எக்ஸ், மெட்டா தளங்கள் சமூகவலைதள குற்றங்களை தூண்டுவதால் இதுபோன்ற மிரட்டல் வருவதாக ஒன்றிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

காற்று மாசை கட்டுப்படுத்த தில்லியில் பார்க்கிங் கட்டணத்தை இரட்டிப்பாக்க மாநக ராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இருசக்கர வாக னங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.40 ஆகவும் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதே போல பேருந்துகளுக் கான பார்க்கிங் கட்டணம் ரூ.150, ரூ.300 ஆக உயர்த் தப்பட உள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே காரும், சரக்கு  லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.