states

மே.வங்கத்தில் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளைக் கண்காணித்திட குழு அமைப்பு

கொல்கத்தா, ஏப்.15- மாநிலத்தில் அதிகரித்துவரும் ஆர்எஸ்எஸ்-இன் நடவடிக்கைகளைக் கண்காணித்திட, கட்சி யின் சார்பில் குழு அமைக்கப்படவிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், மேற்கு வங்க மாநிலச் செய லாளருமான முகமது சலீம் கூறினார். மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ்-இன் சார்பில் பயிற்சி வகுப்புகள் (ஷாகாக்கள்) அதிகரித்து வரு வது நன்கு தெரிகிறது. இதனைத் துல்லியமாக ஆய்வு செய்திட கட்சியின் சார்பில் இளம் தோழர்க ளையும் உள்ளடக்கி ஒரு குழு அமைக்கப்பட விருக்கிறது என்று முகமது சலீம் கூறினார். சில  தனிநபர்கள் இதனை இதுவரை செய்து வந்தனர் என்றும், இப்போது கட்சியே அதனை மேற் கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளின் எண்ணிக்கை மிகவும் வேகமாக விரிவடைந்திருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அதன் சார்பில் மாநிலம் முழுதும் 1,664 ஷாகாக்கள் (தினசரிப் பயிற்சி வகுப்புகள்) நடைபெற்றுள்ளன. சென்ற ஆண்டு இதன் எண்ணிக்கை 1,549 ஆக இருந்தது.   2011இல் மம்தா பானர்ஜி முதலமைச்ச ராகப் பதவியேற்றபின்னர், ஆர்எஸ்எஸ் நடவ டிக்கைகள் மிக வேகமாக அதிகரித்திருக்கின்றன. 2011இல் மம்தா பானர்ஜி முதலமைச்சராகப் பொ றுப்பேற்றபோது, மாநிலத்தில் சுமார் 700 ஷாகாக் கள் நடந்தன. ஆர்எஸ்எஸ்-உம் அதன் துணை அமைப்பு களும் மக்கள் மத்தியில் மதவெறி அடிப்படை யில், வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் விதத்தில், மதவெறி நஞ்சைப் பரப்பிக் கொண்டிருக்கின் றன. இது, அரசியல் ரீதியாகவும், கலாச்சாரரீதி யாகவும் எங்கள் குழுவினரால் எதிர்கொள்ளப் படும் என்றும் முகமது சலீம் கூறினார். கட்சியால் அமைக்கப்படும் இந்தக்குழு வானது, ஆர்எஸ்எஸ்-இன் பயிற்சி வகுப்புகள் எங்ஙனம் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்து, கட்சிக்கு அறிக்கை தாக்கல் செய்தி டும். அதன் அடிப்படையில் கட்சி தன் எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடும் என்றும் முகமது சலீம் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில், விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற விருக்கின்றன. இதில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, பாஜக-வினர் “திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக ஒற்று மையை கட்ட வேண்டும்” என்று வெளிப்படை யாகவே பேசி வருகின்றனர். தற்போது இடதுசாரிகள் மாநிலத்தில் புத்து யிர்பெற்று வளர்ந்திருப்பதைத் தாங்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத் துடனேயே இதுபோன்று அவர்கள் பேசத் தொடங்கியிருக்கின்றனர். “வங்கத்தில் பாஜக இப் போதும் ஒரு பலவீனமான அமைப்பேயாகும். அவர்கள் முஸ்லீம் வாக்குகளில் பிளவினை  ஏற்படுத்திட நம்மைப் பயன்படுத்த முயற்சிக் கிறார்கள். அவர்களின் சூழ்ச்சித் திட்டங்கள் என்னென்ன என்பதை மக்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துச் செல்லும். எந்தக் காலத்திலும் இடதுசாரி சக்திகள், பாஜக-வுடன் எவ்விதமான உறவும் வைத்துக்கொள்ளாது,” என்றும் முகமது சலீம் தெளிவுபடுத்தினார். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டபின்னர், கட்சியின் வேட்பாளர்க ளின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.                    (ந.நி.)