states

10 ஆம் வகுப்பு தேர்வு நாளை துவங்குகிறது

சென்னை, ஏப்.4-  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்.3 அன்று முடிந்தது.  11 ஆம் வகுப்புகளுககு மார்ச் 14 அன்று தேர்வு தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. இந்த தேர்வு  ஏப்.5 ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இதையடுத்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வியாழனன்று (ஏப். 6) தொடங்குகிறது. இத்தேர்வை 9 லட்சத்து 97 ஆயிரத்து 89 மாண வர்கள் 12,639 பள்ளிகளில் அமைக்கப் பட்டுள்ள 4,025 அரசு மையங்களிலும், 182 தனியார் மையங்களிலும் எழுத உள்ளனர். சிறை கைதிகள் 264 பேரும், மாற்றுத் திறன் மாணவர்கள் 13,151 பேரும் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகளை அரசு  தேர்வுத்துறை மூலம் செய்யப்பட்டுள் ளது. 12 ஆம் வகுப்பு தேர்வில் தமிழ்  உள்ளிட்ட  முக்கிய பாடத் தேர்வுகளை  50 ஆயிரம் மாணவர்கள் எழுதாத நிலை யில் 10 ஆம் வகுப்பு தேர்வில் ‘ஆப்செ ன்ட்’ இல்லாமல் முழு அளவில் மாணவர் களை தேர்வு எழுத வைக்க கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.6 அன்று தமிழ் தேர்வு தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து 7 ஆம் தேதி புனித வெள்ளி  அரசு விடுமுறையாகும்.  தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு 10 ஆம் தேதி ஆங்கிலம் தேர்வு நடைபெறு கிறது.  13 ஆம் தேதி கணிதம், 15 அன்று  விருப்ப மொழிப்பாடம், 17 அறிவியல் தேர்வும் 20 அன்று சமூக அறிவியல் தேர்வுடன் நிறைவுபெறுகிறது.  மாணவர்கள் தேர்வு மையங்களில் முறைகேடு மற்றும் ஒழுங்கீன செயல்க ளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் தேர்வு மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கண் காணிப்பாளர்கள் கட்டாயம் தேர்வு மையத்திற்கு செல்போன் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தலின் பேரில் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்பார் வையில் தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.