- சென்னையில் நடை பெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை யொட்டி பல இடங்களில் விதவிதமாக “தம்பி” வலம் வருகிறார்.தீக்கதிர் முக்கிய செய்திகள்
- தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை நோய் இல்லை. நாகர்கோ விலில் 4 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் பொய்யானது. பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். குரங்கம்மை நோய் கண்ட றியப்பட்டால் பொது மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்த ஊட கங்களுக்கு கூறுவோம் என தமிழ்நாடு மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி யுள்ளார்.
- சென்னை பெருங்குடி அன்னை சத்யா நகருக்கு அருகே உறை கிணற்றை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி சரவணன் (49) என்பவரும், கிணறு சுத்தம் செய்யும் தொழி லாளி காளிதாஸ் (55) ஆகியோர் உயிரிழந்தனர்.
- மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பருய்பூரில் ஆஷா ஊழி யர்கள் தங்களது சம்ப ளத்தை உயர்த்திகோரி யும், சுகாதாரப் பணி யாளர்களாக அங்கீகரி க்கக் கோரியும் பிரம்மா ண்ட போராட்டம் நடத்தி னர்.
- இந்திய கடற்படையின் ஏவுகணை போர்க்கப்ப லான ஐஎன்எஸ் தர்காஷ் மத்திய தரைக்கடல் வழி யாக அட்லாண்டிக் கட லுக்குள் நுழைந்தது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி தேசியக் கொடியை ஏற்று வதற்காக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ வுக்குச் செல்ல ஐஎன்எஸ் தர்காஷ் தென் அமெரி க்காவுக்குச் செல்கிறது.
- தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், சமாஜ் வாதி கட்சி தலைவர் அகி லேஷ் யாதவ் ஆகியோர் தேசிய அரசியல் மற்றும் பிற தேசிய பிரச்சினைகள் குறித்து தில்லியில் விவாதித்தனர்.
- பாஜக யுவமோர்ச்சா பிர முகர் பிரவீன் கொலை வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ள தாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
- இந்தியாவில் மற்ற மாநி லங்களைவிட தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநில மாக விளங்குகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் போல் கேரளாவும் கல்வி அறி வில் சிறந்து விளங்குவ தாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
- சுற்றுலாத்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டில் கியூபாவும், சீனாவும் கையெழுத்திட்டுள்ளன. இதை செய்தியாளர்களிடம் தெரிவித்த சீனாவுக்கான கியூபாவின் தூதுவர் கார்லோஸ் மிகுவோல் பெரிரா, ‘‘கலாச்சார, மருத்துவ மற்றும் வரலாற்றுத் தொடர்பான சுற்றுலாக்களில் இருதரப்பும் மேம்படுத்துவதற்கான நோக்கத்தோடு இந்த உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டார். சீனாவின் பயணக் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதால் இது சரியான சந்தர்ப்பம் என்றும் கூறினார்.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளை மீண்டும் கட்டமைப்போம் என்று பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதியும், அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுபவருமான லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா உறுதியளித்துள்ளார். நாடு எதிர்கொள்ளும் சமூக ரீதியான சவால்களை அரசின் கொள்கைகளோடு இணைக்கும் திட்டமும் நடைமுறைக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
- பொருளாதாரம் சீர்குலையும் நிலையில் நேபாளம் இருக்கிறது என்ற செய்தி பரவிக் கொண்டிருக்கையில், அப்படிப்பட்ட பலவீனமான நிலையில் அந்நாடு இல்லை என்று ஐ.எம்.எப்(சர்வதேச நிதி அமைப்பு) கூறியுள்ளது. இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஐ.எம்.எப்.க்கான நேபாளப் பிரதிநிதி தெரசா தபன் சான்செஸ், ‘‘பொருளாதார அபாயங்களைச் சந்திக்கும் பலத்துடனே நேபாளம் உள்ளது. அந்நிய செலாவணி குறைந்தாலும், போதிய அளவு இருப்பு உள்ளது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.