states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மேட்டூர் அணை: நீர் திறப்பு  அளவு குறைப்பு

சேலம், நவ. 8 - காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்த தன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின்  அளவு விநாடிக்கு 11 ஆயி ரத்து 063 கன அடியிலிருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 466 கன அடியாக குறைந்துள் ளது. இதனிடையே, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து 10 ஆயி ரம் கன அடியாக குறைக்கப் பட்டுள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை  106.81 அடியில் இருந்து  106.60 அடியாக குறைந்துள் ளது.

தூர்வாரப்படும் மேட்டூர் அணை

மேட்டூர், நவ. 8 - மேட்டூர் அணை 90 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தூர்வாரப்பட உள் ளது. சோதனை அடிப்படையில் அணை யின் குறிப்பிட்ட பகுதியில் 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண்ணைத் தூர்வார தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை 1934-ஆம் ஆண்டு  கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த அணை கட்டப் பட்டதில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 90 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், அணையின் கொள்ளளவில் சுமார் 30 சதவிகிதம் மண் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. மேட்டூர் அணையைத் தூர்வாரினால் 30 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் கூடுதலாக சேமிக்க முடியும் என்பதால் அணையைத் தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மேட்டூர் அணையைத் தூர்வார 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று கூறப்படுகிறது.

ஜம்மு–காஷ்மீர் சட்டமன்றத்தை வன்முறைக் களமாக மாற்றிய பாஜக எம்எல்ஏக்கள்

ஸ்ரீநகர் ஜம்மு–காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு தகுதி வழங்கக் கோரி சட்டமன்றத்தில் புதன்கிழமை (நவ., 6) ஆளும் “இந்தியா” கூட் டணிக் கட்சிகள் ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றின. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து பாஜக எம்எல்ஏக்கள் அமளி என்ற பெய ரில் ஜம்மு–காஷ்மீர் சட்டமன்றத்தை வன்முறைக் களமாக மாற்றி வருகின்றனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளான புதன்கிழமை முதல் சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக அமளி யில் ஈடுபட்டு வரும் பாஜக எம்எல்ஏக்கள், வெள்ளிக்கிழமை அன்றும் 3ஆவது நாளாக அமளியில் ஈடுபட்டனர். சிறப்பு தகுதிக் கோரி அவாமி இத்தேஹாத் கட்சி (ஏஏபி) தலைவர் ஷேக் குர்ஷித் பிடித்து இருந்த பதாகையை பாஜகவினர் பிடுங்கி கிழித்து எறிந்தனர். மேஜை மீது ஏறி கூப்பாடு போட்டனர். இதனால் சபாநாயகர் அப்துல் ரஹீம் பாஜக எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். அவை யில் இருந்து வெளியேற்ற முயன்ற காவ லர்கள் மீதும் பாஜக எம்எல்ஏக்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் சட்டமன்ற அவையில் பதற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு அவை காவ லர்கள் குண்டுக்கட்டாக பாஜக எம்எல்ஏக் களை வெளியேற்றினர்.   ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை “அமளி என்ற பெயரில் பாஜக எம்எல்ஏக் கள் அரசியலமைப்பை அவமதித்து வரு கின்றனர். அதனால் பாஜக எம்எல்ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஜம்மு-காஷ்மீர் உணவுத்துறை அமைச்சர் சதீஷ் சர்மா சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

பழங்குடியினரிடம் இருந்து வனம், நிலத்தைப் பறிக்க பாஜக முயற்சி ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் (சிம்டேகா இடத்தில்) ராகுல் காந்தி பேசுகையில், “அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் அல்ல. இதில் பிர்சா முண்டா, அம்பேத்கர், ஜோதிராவ் பூலே, மகாத்மா காந்தி ஆகியோரின் சிந்த னைகள் உள்ளன. இந்த அரசிய லமைப்புச் சட்டம்தான் நாட்டின் பழங்குடி யினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் ஏழைகளை பாது காக்கிறது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நாட்டை இயக்க வேண்டும் என்று “இந்தியா” கூட்டணி விரும்புகிறது.  நாங்கள் உங்களை ‘பழங்குடி யினர்’ என்கிறோம். ஆனால் பாஜக உங் களை ‘வனவாசி’ என்கிறது. ஆங்கி லேயர்கள் உங்களை வனவாசிகள் என்றும் அழைத்தார்கள். உங்கள் தண்ணீர், காடுகள் மற்றும் நிலங் களை பாதுகாக்க பிர்சா முண்டா ஆங்கி லேயர்களுடன் போராடினார். இன்று நாங்களும் உங்கள் உரிமைக்காக போராடுகிறோம். உங்கள் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றை பாஜக பறிக்க நினைக்கிறது. அதனால்தான் உங்களை வனவாசி என்று அழைக்கிறது. ஆதி வாசி என்றால் நாட்டின் முதல் உரிமை யாளர் என்று பொருள். அதேசமயம் வனவாசியாக இருப்பது உங்களுக்கு நாட்டில் எந்த உரிமையும் இல்லை என்று அர்த்தம். நீங்கள் பழங்குடியினர். நாட்டின் மீது உங்களுக்கே முதல் உரிமை உள்ளது.  அரசமைப்புச் சட்டத்தில் எங்கும் ‘வனவாசி’ என்ற வார்த்தையை நீங்கள் காண முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களும் வன வாசி என்பதற்குப் பதிலாக ‘பழங்குடி யினர்’ என்ற வார்த்தையையே பயன் படுத்தினார்கள் என அவர்பேசினார்.

விருதுநகரில் முதல்வர் இன்று கள ஆய்வு புதிய ஆட்சியரகத்தை திறந்து வைக்கிறார் 

விருதுநகர், நவ.8- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் இன்றும், நாளையும் ( நவ.,9,10) கள ஆய்வு மேற்கொண்டு, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்து,  நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விருதுநகர் - மதுரை 4 வழிச் சாலையில் பெண்கள் கல்லூரி  அருகே     அமைச்சர்கள்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமையில் திமுகவினர் வரவேற்பு அளிக்கின்றனர். அன்று மதியம் கன்னிச்சேரிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காவல் நிலையத்தை ஆய்வு செய்கிறார்.  ஆலை வளாகத்தில் உள்ள அரங்கத்தில்   அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.  இரவில் விருதுநகர் இராமமூர்த்தி சாலையில் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள், வாக்குச் சாவடி பொறுப்பாளர்களின் பணிகள் குறித்து கட்சியினரிடம் கலந்துரையாடுகிறார்.  நவம்பர் 10 அன்று புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைப்பதோடு,   பட்டம்புதூரில் இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.  ரூ.101 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து ரூ.417 கோடியில் 57 ஆயிரத்து 556 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். 

மழைக்காலத்தில் தடையில்லா மின்சாரம் 

சென்னை,நவ.8- பருவ மழைக்காலத்தில் சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்ள வேண்டும் என்று மின் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.  தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் மின்சா ரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில்,  பொதுமக்க ளிடமிருந்து சமூக வலைதளங் கள் மூலமாக பெறப்படும் புகார்கள் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். அத்துடன், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்ப தற்கான அனைத்து நடவ டிக்கைகளையும் மேற்கொள்ள வும் அறிவுறுத்தியுள்ளார். 

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும்  பகுதிகளில் நாளை நீதிபதிகள் ஆய்வு

திருநெல்வேலி, நவ.8 - வற்றாத ஜீவ நதியான தாமிர பரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது என்று பல்வேறு தரப்பினரும் வேத னையுடன் புகார் கூறி வருகின்றனர்.  இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், தாமிரபரணி ஆற்றில் மாசு கலப்பதை தடுக்க உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதிகாரிகள் அதனை வேடிக்கைப் பார்த்து வருகின்றனர் எனவும் சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள், மண்ட பங்கள் சிதிலமடைந்து வருகின்றன. இவற்றை பழமை மாறாமல் சீர மைத்து பராமரிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொட ரப்பட்டது. இந்த மனு சமீபத்தில் நீதி பதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புக ழேந்தி அமர்வு முன்பாக விசார ணைக்கு வந்தது. இந்த வழக்கில் நெல்லை மாநக ராட்சி ஆணையர் சுகபுத்ரா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப் போது அவர், “மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதியில் கழிவு நீர் கலப்ப தை பல கட்டங்களாக தடுத்து வரு கிறோம். 2 ஆவது கட்டம் வருகிற டிசம்பர் மாதம் நிறைவடைந்து விடும். 3 ஆவது கட்டம் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும்” என உறுதி கூறினார். மேலும் மாநக ரப் பகுதியில் மொத்தம் 17 இடங்களில் தாமிரபரணி ஆற்றில் நேரடியாக கழி வுநீர் கலப்பதாகவும், மாநகராட்சி தரப்பில் ஒத்துக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “நவ.10 (ஞாயிற்றுக்கிழமை) அன்று  நாங்கள் (நீதிபதிகள்) நெல்லை மாந கராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், தாமிரபரணியில்  கழிவுநீர் கலக்கும் பகுதிகளையும் என பல்வேறு பகுதி களை நேரில் வந்து கள ஆய்வு செய்ய உள்ளோம். அன்றைய தினம் அனைத்து அதிகாரிகளும் அங்கு இருக்க வேண்டும்” என்று உத்தர விட்டு, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தெரி வித்தனர்.  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நீதிபதிகள் வருவதையொட்டி, நெல்லை மாநகராட்சி சார்பில்  தாமிர பரணி ஆற்றங்கரையோரம் சாக்கடை  கழிவு நீர் கலக்கும் பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.மேலப்பாளையம், தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட் பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதி காரிகள் மேற்பார்வையில், தூய்மை பணியாளர்கள் அந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றுக்குச் செல்லும் வழி பாதைகளில் உள்ள மண் குவியல் களை அப்புறப்படுத்துதல், முட்செடி களை வெட்டி அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்ற னர். மேலும் குடியிருப்பு பகுதிகளி லிருந்து தாமிரபரணி ஆற்றில் நேரடியாக கழிவுநீர் கலப்பதை  தடுக்கும் வகையில் அமைக்கப் பட்டிருந்த ஜல்லி நிரப்பிய தொட்டிகள் சேதமடைந்த நிலையில், அவற்றை புதுப்பித்து அவற்றில் புதிதாக ஜல்லிகளை நிரப்பி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

முனைவர் மா.செல்வராசனுக்கு  செம்மொழித் தமிழ் விருது

சென்னை, நவ.8- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா.செல்வராசனுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக் கிழமை (நவ.8) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரி யர் முனைவர் மா. செல்வ ராசனுக்கு  விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.

ஜெயங்கொண்டம் அருகே கைத்தறி பூங்கா 

அரியலூர்,நவ.8- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 3 மாதத்தில் கைத்தறி பூங்கா  அமைக்கப்பட உள்ளது என்று தமிழக கைத்தறி-துணிநூல்துறை அமைச்சர். காந்தி தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் அமைய உள்ள 10 சிறிய கைத்தறி பூங்காக்களில் 4 ஆவதாக ஜெயங்கொண்டத்தில் அமைக்கப்படுகிறது. செங்குந்தபுரம் பகுதியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைய உள்ள இடத்தில் அமைச்சர் காந்தி, சிவசங்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பாம்புக்கடி சிகிச்சை விவரங்களை  தெரிவிக்க அரசு உத்தரவு

சென்னை,நவ.8- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாம்புக் கடி தொடர்பான சிகிச்சை விவரங்களை தெரிவிக்கு மாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.   சிகிச்சை விவரங்களை தெரிவிப்பதால் தரவுகளை ஆராய்ந்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடி யும். ஊரக பகுதிகளில் பாம்பு  கடி மருந்துகளை தேவைக்கு ஏற்ப வைத்திருப்பதன் மூலம் மரணங்களை குறைக்க முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜூன் சம்பத் கைது

சென்னை,நவ.8- சென்னை அண்ணா சாலையில் நவம்பர் 8அன்று  தடையை மீறி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலை வர் அர்ஜூன் சம்பத் தலை மையில் சென்னை அண்ணா சாலை தாராப்பூர் டவர் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த 15 பேர் வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன் றதாக கைது செய்தனர்.