சேதுக் கால்வாய்த் திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்து நிறை வேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மா னம் தமிழக சட்டப் பேரவையால் ஒரு மன தாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக வினரும் கூட இந்த தீர்மானத்தை ஆத ரித்துள்ளனர். இந்த திட்டத்தை எதிர்ப்பது தமிழக மக்களின் 150 ஆண்டுகளுக்கும் மேலான கனவை எதிர்ப்பதாக முடியும் என்று புரிந்து கொண்ட அவர்கள், ஏதேதோ சாக்குப் போக்கு கூறி சமாளிக்க முயன்றாலும் கடைசியில் வேறுவழியின்றி தீர்மானத்தை ஆதரித்துள்ளனர். பாஜகவின் சார்பில் பேசிய நயினார் நாகேந்திரன் கூட, ராமர் பாலத்திற்கு சேத மில்லாமல் இந்த திட்டத்தை நிறைவேற்ற லாம் என்று கூறியுள்ளார். அவருக்கு அந்த கவலை தேவையில்லை. ஏனெனில் அவ ரது கட்சியைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்கே, ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாகக் கூற முடியாது. அதற்கான துல்லிய ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறியிருக்கி றார்.
இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக் குழுத் தலைவர் நாகை மாலி, இராமாயணம் என்கிற புராண இலக்கியம் குறித்து மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மூதறிஞர் ராஜாஜி ஆகியோர் கூறிய கருத்துக்களை திறம்பட எடுத்துரைத் துள்ளார். கம்ப இராமாயணத்தில் ராமர் கட்டிய பாலத்திற்கு ஆதாரம் இல்லையே என்று சில அறிஞர்கள் எடுத்துக் காட்டிய போது தமிழில் எழுதப்பட்ட கம்ப இராமா யணத்தையெல்லாம் ஆதாரமாக கொள்ள முடியாது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணத்தை மட்டும்தான் ஆதாரமாக கொள்ள முடியும் என்று சில விஎச்பி சாமியார்கள் கம்பனை இழிவு படுத்தியதையும் நினைவு கூர்ந்துள்ளார். வால்மீகி இராமாயணத்திலும் கூட ராமேஸ் வரத்திற்கும் இலங்கைக்கும் இடையே ராமர் பாலம் கட்டியதாக எந்த இடத்திலும் இல்லை என்று ஏ.அமிர்தலிங்க ஐயர் உள்ளிட்ட அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த பெருமக்கள் இராமாயணம் எனும் காவியம் குறித்து சொன்ன கருத்துக் களை மேற்கோள் காட்டியுள்ளார். எந்த இடத்திலும் அவர் மக்களுடைய நம்பிக்கை யையோ, ராமனை கடவுளாக நம்புகிற பக் தர்களையோ இழிவுபடுத்தவில்லை. ஒரு கதையை அடிப்படையாக கொண்டு தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி தென்னக மக்களுக்கே பலன் தரக் கூடிய ஒரு திட் டத்தை முடக்கி வைத்த கொடுமையைத் தான் எடுத்துரைத்துள்ளார்.
ஆனால், சம்பந்தமே இல்லாமல் அதி முகவைச் சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் ஆஜராகி, ராமன் ஒரு அவதாரப் புருசர். அவரை கற்பனை பாத்திரம் என்று நாகை மாலி கூறியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று துள்ளிக் குதித் துள்ளார். போலி ராம பக்தியில் பாஜகவினருக்கே பாடம் எடுக்க துணிந்துவிட்டார் பொள்ளாச்சி ஜெயராமன். பொள்ளாச்சியில் நடந்தது ஊரறியும்; உலகறியும். “இந்த இப்பிற விக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்” என்று ராமனை பாடுகிறார் கம்பர். பொள்ளாச்சி காணொலி காட்சி களின் கதறல்கள் இன்னமும் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இராமாயணம் குறித்து மகாகவி பாரதி பாடியுள்ளதையும் ஜெயராமனுக்கு நினைவு படுத்துவோம்.
உண்மையின் பேர்தெய்வம் என்போம்--அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்; உண்மைகள் வேதங்கள் என்போம்--பிறிது உள்ள மறைகள் கதையெனக் கண்டோம். கடலினைத் தாண்டும் குரங்கும்--வெங் கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும், வடமலை தாழ்ந்ததனாலே--தெற்கில் வந்து சமன்செய்யும் குட்டை முனியும் நதியி னுள்ளேமுழு கிப்போய்--அந்த நாகர் உலகிலோர் பாம்பின் மகளை விதியுற வேமணம் செய்த--திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம். ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்--ஒன்றில் உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும் நன்று புராணங்கள் செய்தார்--அதில் நல்ல கவிதை பலபல தந்தார். கவிதை மிகநல்ல தேனும்--அக் கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்; புவிதனில் வாழ்நெறி காட்டி--நன்மை போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.